புதன், 20 ஜூலை, 2011



பண்டை நாள் - முன்பு; பார் இடந்த - பூமியைத் தன் கொம்பால்குத்தி எடுத்த; வெம்பன்றி - சினம்மிகுந்த வராகத்தையும்; நீர் கடைந்த - (மந்தர மலையாகிய மத்தை அழுத்தாமல் தாங்கியிருந்து) கடலைக் கடந்த; பேர் ஆமை - பெரிய கூர்மத்தையும்; நேர் உளான் - வலிமையால்
நிகர்ப்பவன்; மார்பு இடந்த - இரணியனின் மார்பினைப் பிளந்த; மா எனினும் - நரசிங்கமே வந்ததாயினும்; அவன் - அவ்வாலியின்; தார்கிடந்த தோள் - மாலையணிந்த தோள்களை; தகைய வல்லதோ - அடக்கக் கூடிய வலிமையுடையதாகுமோ? (ஆகாது).

வாலி பூமியைப் பெயர்க்கும் ஆற்றலும், மலையைத் தாங்கும் வன்மையும், கடலைக்கடையும் திறலும் உடையவன் என்பது இதனால் பெறப்பட்டது. 'பண்டை நாள்' என்பது இடைநிலை விளக்காய் முன்னும் சென்று பொருந்தியது. இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கத்திற்கும் வாலியின் தோள் வலிமையை அடக்க இயலாது என வாலியின் தோளாற்றலைக் கம்பர் எடுத்துரைக்கிறார். திருமாலின் அவதாரமான இராமனும் வாலிக்கு எதிர்நின்று போர் புரியாது மறைந்து நின்று வெல்வது
ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 43



அனந்தனும் - ஆதிசேடனும்; படர்ந்த நீள்நெடும் தலைபரப்பி - ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக்கொண்டு; மீது - அத்தலைகளின் மேலே; அடர்ந்து பாரம் வந்துஉற - நெருங்கிப் பாரம் மிகுதியாகப் பொருந்தியிருக்க; இடந்து - (நின்று தாங்க முடியாமல்) கீழே
கிடந்து; இப்புவனம் நாள்எலாம் - இப் பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்); தாங்கும் - தாங்குவான்; இக்கிரியை மேயினான் - இந்தக் கிட்கிந்தை மலையில் வாழும் வாலியோ; நடந்து தாங்கும் - நடந்து கொண்டே அப்பூமியைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடையவன்.

பூமியின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன் வருந்திக் கிடந்து தாங்கிக் கொண்டிருக்க, ஒரு தலை உடைய வாலி நடந்து கொண்டு எளிதாகத் தாங்குவான் எனக்கூறி ஆதிசேடனை விட வாலி வலிமை மிக்கவன் என்பது உணர்த்தப்பட்டது. இது வேற்றுமை அணி
பொருந்தியது. கிட்கிந்தை அருகில் தோன்றுவதால் 'இக்கிரி' என்றான். அனந்தனும் - உம்மை உயர்வுசிறப்பு. 44



அடலின் வெற்றியாய் - வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே! தொடர - இடைவிடாமல்; கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக் கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது
செல்வதும்
- தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வொலி; சுளியும் என்று அலால் - சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆவவோ - பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல).

இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது - எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும்
மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும் கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும்.

அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. 45



ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம் என்கின்ற அளவு உள்ளதும்; மேருவைத் தள்ளல் ஆன - மேருமலையைத் தள்ளக்கூடியதுமான; தோள் அரியின் தானையான் - தோள் வலிமை உள்ளதுமான வானரப்படையை உடையவன்; வள்ளலே - வள்ளல்தன்மை
உடையவனே! அவன் - அவ்வாலி; வலியின் வன்மையால் - வலிமையின் மிகுதியால்; உள்ளம் ஒன்றி - மனம் ஒன்று பட்டு; எவ்வுயிரும் வாழும் - எல்லா உயிர்களும் வாழ்கின்றன;

வாலியின் சேனைச் சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் இங்குக் கூறப்பட்டுள்ளன. வள்ளல் என்பது இங்கு இராமனைக் குறிக்கும். வெள்ளம் என்றது பேரெண். யானை ஒன்றும், தேரொன்றும், குதிரை மூன்றும் காலாள் ஐந்தும் கொண்டது- பக்தி; பக்தி மூன்று கொண்டது சேனாமுகம்; சேனாமுகம் மூன்று கொண்டது குடமம்; குடமம் மூன்று கொண்டது கணம்; கணம் மூன்று கொண்டது வாகினி;
வாகினி மூன்று கொண்டது பிரதனை; பிரதனை மூன்று கொண்டது சமூ; சமூ மூன்று கொண்டது அநீகினி; அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி; அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம்; ஏகம் எட்டுக் கொண்டது கோடி; கோடி எட்டுக் கொண்டது சங்கம்; சங்கம் எட்டுக் கொண்டது விந்தம்; விந்தம் எட்டுக் கொண்டது குமுதம்; குமுதம் எட்டுக் கொண்டது பதுமம்; பதுமம் எட்டுக் கொண்டது நாடு; நாடு எட்டு்க் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் என்பர். 46



விளிவை அஞ்சலால் - (வாலி சினம் கொண்டால்) தமக்கு அழிவு நேருமே என்று அஞ்சுவதால்; அவன் - அவ்வாலி; விழைவு இடத்தின் மேல்- விரும்பித் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிராக; மழை இடிப்பு உறா - மேகம் இடித்து ஒலிக்கமாட்டா; வய வெம் சீயமா - வலிமை மிக்க கொடிய
சிங்கமாகிய விலங்குகள்; முழை இடிப்பு உறா - குகையில் இடிபோல் முழங்கமாட்டா; முரண் வெம் காலும் - வலிய கொடிய காற்றும்; மென் தழை துடிப்புற - அங்குள்ள மெல்லிய இலைகள் நடுக்கம் கொள்ள; சார்வு உறாது - அவற்றின் பக்கத்தில் வராது.

வாலி இருக்கும் இடத்தில் தன் வல்லமையைக் காட்டினால் தமக்கு இறுதி நேரிடும் என்று அவனது வலிமைக்கு அஞ்சி மேகமும், சிங்கமும், காற்றும் அடங்கி நடக்கும் என்பதால் வாலியின் பெருவலி உணர்த்தப்பட்டது. வாலி விரும்பித் தங்கும் இடத்தே இடியோ, இடிபோன்ற முழக்கமோ கேளா; காற்று மென்மையாக வீசும் என அறிய முடிகிறது.



மெய்க் கொள் வாலினால்- தன் உடம்பில் உள்ள வாலினால்; மிடல் இராவணன் - வலிமை மிக்க இராவணனின்; தொக்க தோள் - இருபதாகச் சேர்ந்து விளங்கிய தோள்களை; உற - ஒரு சேரப் பொருந்தும்படி; தொடர்ப்படுத்த நாள் - கட்டிப் பிணித்த அந்நாளில்; புக்கிலாதவும் -
அவன் செல்லாததும்; பொழி அரத்த நீர்- அவ் இராவணன் உடம்பினின்று சொரிந்த இரத்த வெள்ளம்; உக்கிலாத - சிந்தாததும் ஆகிய; வேறு உலகம் யாவதோ - வேறு உலகம் யாது உள்ளதோ?

'புக்கிலாத உலகம், அரத்த நீர் உக்கிலாத உலகம் வேறு யாவது' என்ற வினா. யாதும் இல்லை என்ற மறுதலைப் பொருளைத் தந்தது. நீர்ப்பொருள் ஒற்றுமைப்பற்றி 'அரத்த நீர்' எனப்பட்டது. வாலில் கட்டுண்ட இராவணன் வாலி சென்ற எல்லா உலகங்களிலும் புகுந்தான். அவன் குருதி எல்லா
உலகங்களிலும் சிந்தியது என்பதாம். இதனால் இராவணனை வென்ற வீரமுடையவன் வாலி என்பது பெறப்பட்டது. சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது
வரலாறு.



மொய்ம்பினோய் - வலிமை உடையவனே! இந்திரன் தனிப்புதல்வன்- இந்திரனின் ஒப்பற்ற மைந்தனாகிய அவ்வாலி; இன் அளிச் சந்திரன் - இனிமையும் குளிர்ச்சியும் கொண்ட சந்திரன்; தழைத்தனைய தன்மையாள் - அனைத்துக் கலைகளுடன் வளர்ச்சி பெற்றது போன்ற
வெண்ணிறத்தைஉடையவன்; அந்தகன் தனக்கு - யமனுக்கும்; அரிய ஆணையான் - கடத்தற்கரிய ஆணையை இடுபவன்; இவனின் - இந்தச் சுக்கிரீவனுக்கு; முந்திவந்தனன் - முன்னே தமையனாகப் (ஒரு தாய்வயிற்றில்) பிறந்தவன்.

இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும் உணர்த்தினான். எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான் என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது. வாலி சுக்கிரீவர்க்குத் தாய் ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் -
உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன் விகாரமாகவாவது கொள்க. தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன் வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர் அமைத்துள்ள நயம் காண்க. 49



அன்னவன் - அத்தகையோனாகிய வாலி; எமன் அரசன் ஆகவே- எங்களுக்கு அரசனாக இருக்க; இன்னவன் - இச்சுக்கிரீவன்; இளம்பதம் இயற்றும் நாள் - இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்; முன் அவன் குலப் பகைஞன் - முன்னமே வாலியின் குலப்பகைவனாய் உள்ளவனான; மின் எயிற்று வாள் அவுணன் - மின்னல் போன்று ஒளி வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்; வெம்மையான்- சினம் கொண்டவனாய் (வாலியை); முட்டினான் -எதிர்த்தான்.



முட்டி நின்று- (அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர்செய்த; அவன் முரண் உரத்தின் நேர் - அவனது வலிய ஆற்றலுக்கு எதிரில்; ஒட்ட அஞ்சி - நின்ற போர்செய்வதற்கு அஞ்சி; நெஞ்சு உலைய ஓடினான் - மனம் நடுங்கத் தப்பி ஓடினான்; வட்ட மண்டலத்து - வட்ட
வடிவமாகிய பூமியில்; வாழ்வு அரிது - உயிர் வாழ்தல் அரிது; எனா - என்று எண்ணி; எட்ட அரும் பெரும்பிலனுள் - எவரும் செல்லுதற்கரிய பெரிய பிலத்துவாரத்துள்; எய்தினான் - புகுந்தான்.

வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட 'எட்டரும் பெரும்பிலன்' என்றான். பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி.பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி. 51



எய்து காலை - (அவ்வாறு மாயாவி) பிலத்தினுள் நுழைந்த போது; வெகுளி மேயினான் - சினங்கொண்டவனாகிய வாலி; நோன்மையாய் - (சுக்கிரீவனை நோக்கி) வலிமை உடையவனே! அப்பிலனுள் எய்தி - அவன் நுழைந்த பிலத்தினுள் நுழைந்து; யான்- நான்; நொய்தின் அங்கு- விரைவில் அங்குள்ள; அவற் கொணர் வென்- அவனைப் பிடித்துக் கொணர்வேன்; நீ
சிறிது போழ்து -
நீ சிறிது நேரம்; காவல் செய்தி - இப்பிலத்திலிருந்து வேறுவகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்; எனா - என்று கூறி; வெய்தின் எய்தினான்- விரைவாக அப்பிலத்துள் சென்றான்.

மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு தம்பியை அப்பிலவாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான் என்பதாம். காவல் காக்கும் வலிமையுடையனாதலின் தம்பியை 'நோன்மையாய்' என விளித்தான். நொய்து, வெய்து என்பன விரைவுப் பொருள 52



வாலியும் - வாலியும்; ஏகி - சென்று; இருது ஏழொடு ஏழ் - பதினான்கு பருவகால வரையிலும்; வேகம் - வேகத்தோடு; வெம்பிலம் தடவி- கொடிய பிலத்தினுள்ளே தேடிப் பார்த்து; வெம்மையான் - கொடுந்தன்மையுடைய அசுரனை; மோக வென்றி மேல் - (வெல்லுதலாகிய)
விரும்பத்தக்க வெற்றிமேல் கருத்துடையவனாய்; முயல்வின் வைகிட - அம்முயற்சியின் ஈடுபட்டிருக்க; துணை - தம்பியான சுக்கிரீவன்; சோகம் எய்தினன் - துன்பம் அடைந்தவனாய்; துளங்கினான் - கலங்கினான்.

பிலத்துள் சென்ற வாலி அசுரனைத் தேடுதலும், தேடிக்கொண்டு பிடித்தலும், பிடித்துப் போர்செய்தலும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு இருபத்தெட்டு மாதங்கள் வெளிவராததனால் 'வாலிக்கு என்ன இடுக்கண் நேர்ந்ததோ' எனக் காவல் காத்து நின்ற சுக்கிரீவன் கலங்கினான். இருது -
இரண்டு மாத காலங்களைக் கொண்டது. ஏழொடு ஏழ் - பதினான்கு பருவங்கள் - இருபத்தெட்டு மாதகாலம். துணை - சுக்கிரீவன். இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தமையால் வாலி இறந்திருப்பானோ என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று. வெற்றிமேல் கொண்ட மோகத்தால் 'மோகவென்றி' ஆயிற்று.
53



அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற; இவனை - இச்சுக் கிரீவனை; அன்பினில் தொழுது இரந்து - (நாங்கள்) அன்போடு வணங்கி வேண்டி; எழுது வென்றியாய் - நூல்களில் எழுதத்தக்க வெற்றியை உடையவனே! நின்தொழில் இது ஆதலால் - இளவரசனாகிய நினக்குரிய
தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்; அரசு செய்க - அரசாட்சியை ஏற்றுக்கொள்வாயாக; என - என்று சொல்ல; பரியும் நெஞ்சினான்- (வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்; இது பழுது- இது குற்றமாகும்; என்றனன் - என்று உரைத்தான்.

இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய், இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர். பழுது இது என்றது -
வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது. இதனால் சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும்.



என்று - என்று சொல்லி; தானும் - சுக்கிரீவனும்; அவ்வழி - வாலிசென்ற அவ்வழியே; இரும்பிலம் சென்று - அநதப் பெரிய பிலத்தினுள் சென்று; முன்னவன் தேடுவேன் - வாலியாம் என் தமையனைத் தேடிப் பார்ப்பேன்; அவற் கொன்றுளான் தனை - (அவன் இறந்து போயிருந்தால்)
அவனைக் கொன்றவனாகிய மாயாவியை; கொல்வன் - (போர்செய்து) கொல்வேன்; அன்று எனின் - கொல்ல இயலவில்லை எனின்; பொன்றுவேன்- (போரில்) இறப்பேன்; எனா - என்று கூறி; புகுதல்
மேயினான் -
அப்பிலத்தில் நுழையப் புகுந்தான்.

முன்னவன் என்றது வாலியை. வாலி சென்ற பிலத்தினுள் புகுந்து வாலியைத் தேடுவது, அசுரன் வாலியைக் கொன்றிருப்பின் அவனைக் கொல்வது, அது இயலாவிடின் மடிவது எனச் சுக்கிரீவன் தன் மனத்துணிவை வெளிப்படுத்தினான். பிலத்தினுள் நுழைய மேயது வாலிமாட்டு அவன் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் காட்டியது. அவற் கொன்றுளான் என
உயர்திணை ஈறு இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் விகாரம் உற்றது.
55



வல்லவர் - அறிவும் சொல்வன்மையும் உடைய அமைச்சர்கள்; தடுத்து- சுக்கிரீவன் பிலத்தினுள் நுழையாதவாறு தடுத்து; தணிவு செய்து- அவனைச் சமாதானப்படுத்தி; நோய் கெடுத்து - அவன் துயரமாகிய நோயைப்போக்கி; மேலையோர் கிளத்து நீதியால் - முன்னையோர்
கூறியுள்ள நீதிமுறையைக் கொண்டு; அடுத்த காவலும் - அடுத்து வரத்தக்க அரசாட்சியை; அரிகள் ஆணையால் - மற்ற வானரர்களின் கட்டளைப்படி; கொடுத்தது உண்டு- இவனுக்குக் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம் - (ஆட்சியை) இவன் விரும்பித் தானாக கைக்கொண்டானோ? (இல்லை).

நோய் - அண்ணனுக்கு யாது ஆயிற்றோ என்ற கலக்கத்தால் ஏற்பட்ட மனத்துயரம்; வல்லவர்களின் கட்டளையை மீற முடியாமல் சுக்கிரீவன் அரசை ஏற்றுக்கொண்டானேயன்றி, அரசு பெறவேண்டும் என்ற வேட்கையால் அன்று எனக் கூறிச் சுக்கிரீவனது தவறின்மையைத் தெளிவாகக் காட்டினான். சுக்கிரீவன் விரும்பி நாட்டைப் பெற்றதாக வாலி நினைத்து அவனைத் துன்புறுத்தியதை எண்ணி, 'இவன் கொண்டனன் கொலாம்' என்றான். இவன் கொண்டதில்லை என்பது கருத்தாகும்.



அன்ன நாளில் - அங்ஙனம் சுக்கிரீவன் அரசேற்றுக் கொண்ட அந்த நாளில்; மாயாவி - மாயாவி; அப்பிலத்து - அந்தப் பிலத்திலிருந்து; இன்ன வாயில் ஊடு- இவ்வாயில் வழியாக; எய்தும் என்ன - இங்கு வருவான் என்று அஞ்சி; யாம் - நாங்கள்; பொன்னின் மால் வரை பொருப்பு - பொன் மயமான பெரிய மேருமலையாகிய மலையை மட்டும்; ஒழித்து - விடுத்து; வேறு உன்னு குன்று எலாம் - வேறு மனத்தால் எண்ணக்கூடிய மலைகள் அனைத்தையும்; உடன் அடுக்கினேம் - ஒன்று சேரக்கொண்டுவந்து அப்பில வாயிலில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கினோம்.

வாலியைக் கொன்ற மாயாவி, சுக்கிரீவனையும் கொல்ல இவ்வாயில் வழியே வருவான் என்ற அச்சத்தால் அவன் வராவண்ணம் பிலவாயிலை அடைத்துவிட்டோம் என்று வாயில் அடைத்ததற்குரிய காரணத்தைக் கூறினான்அனுமன். வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக்குற்றம் சாட்டினான் ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று.



அவ்வழிச் சேமம் செய்து - அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால்அடைத்து) பாதுகாவலைச் செய்து; செங்கதிர்க் கோமகன்தனை - சிவந்தகதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை; கொண்டு வந்து - அழைத்துக்கொண்டு வந்து; யாம் - நாங்கள்; மேவு குன்றின் மேல் -
எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்; வைகும் வேலைவாய்-தங்கியிருந்த காலத்தில்; அவனை - அந்த மாயாவியை; அன்னவன் -அவ்வாலி; ஆவி உண்டனன் - கொன்றான் 58



ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்; உயிர்க் கள்ளை உண்டு - உயிராகிய கள்ளை உண்டு; உளம் களித்த வாலியும் - மனம் களிப்படைந்த வாலியும்; கடிதின் எய்தினான் - விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து; விளித்து நின்று - (வாயில் அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று; வேறு உரை பெறான்- மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்; இளவலார் - 'என் தம்பியார்; இருந்து - வாயிலில் இருந்து; அளித்தவாறு நன்று- காவல் செய்தவிதம் நன்று; எனா- என்று சொல்லி. . . .

கள் உண்டார்க்குக் களிப்பை உண்டாக்குதல் போல மாயாவியைக் கொன்ற வெற்றியும் களிப்பைத் தந்ததால் மாயாவியின் உயிரைக் கள்ளாக உருவகித்தான். அந்தக் கள்ளை உண்டால் வாலியின் மனமும் போதையுற்றது. சுக்கிரீவனுடைய உண்மைநிலை அறியாது மயங்கி உணர்ந்தமைக்கு
இக்களிப்பே காரணம் என்பதை உணர்த்தவே 'களித்த வாலியும்' என்றான். இளவலார் - பண்படியாகப் பிறந்த பெயர்; அல் - பெயர்விகுதி. இகழ்ச்சி பற்றிப் பலர்பாலாக வந்தது. 'நன்று' என்பதும் நன்றன்று என்ற குறிப்பையே உணர்த்தியது. 'செய்தி காவல் நீ சிறிது போழ்து' என்ற வாலியின்
கட்டளைக்குப் பணிந்திருக்க வேண்டியவன், காவலை விட்டதோடு, வாயிலையும் அடைத்தது பொருந்தாத செயல் எனக்கருதியதால் 'இருந்து அளித்தவாறு நன்று' என இகழ்வுபடப் பேசினான்வாலி. 59



அவன்- அவ்வாலி; வால் விசைத்து- தன் வாலை வேகமாகத் தூக்கி; வான் வளி நிமிர்ந்தென - வானத்தின்கண் பெருங் காற்று எழுந்தாற்போல; கால் விசைத்து - தன் காலை வீசி; கடிதின் என்றலும்- வேகமாய் உதைத்த அளவில்; பெரிய வெற்பு எலாம் - (பிலத்தை அடைத்திருந்த) பெரிய மலைகள் எல்லாம்; நீல் நிறத்து - நீல நிறமுடைய; விண் நெடு முகட்டவும்
-
ஆகாயத்தின் உயர்ந்த உச்சியை அடைந்தனவும்; வேலை புக்கவும் - கடலில் விழுந்தனவும் ஆயின.

ஆயின எனும் வினை வருவித்துக்கொள்ளப் பட்டது. விசை - வேகம். நீலம் - நீல் என்றது கடைக்குறை. முட்ட, புக்க என்பன பலவின்பால் குறிப்பு வினை - யாலணையும் பெயர்கள்.வாலியின் காலால் உதைக்கப்பட்ட மலைகளில் உயரச் சென்றவை விண்ணின் உச்சியை அடையவும், தாழச் சென்றவை கடலிலும் விழுந்தன.விசையுடன் ஒன்றைத் தாக்குகையில் விலங்குகள் தம் வாலை வேகமாக நிமிர்த்துக்கொள்ளும் இயல்பு இங்குக் கூறப்பெற்றது. 60



அவன் - வாலி; ஏறினான் - (பிலத்தினின்று) ஏறியவனாய்; எவரும் அஞ்சுற - எல்லோரும் அஞ்சும்படி; சீறினான் - கோபத்தால் சீறிக்கொண்டு; நெடுஞ்சிகரம் எய்தினான்- பெரிய மலை உச்சியை அடைந்தான்; வேறு இல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; ஆதவன் புதல்வன் - சூரியன்
மைந்தனும்; மெய்ம்மை ஆம் ஆறினானும் - உண்மை நெறியில் நடப்பவனுமான சுக்கிரீவன்; வந்து அடிவணங்கி னான் - (தமையன்) முன்வந்து அவன் பாதங்களில் வணங்கினான்.

வாலி வேகத்தோடு மலைகளைத் தள்ளிச் சினத்தொடு கிட்கிந்தையை அடைந்தபோது, மனத்தில் களங்கம் இல்லாத காரணத்தால் சுக்கிரீவன் வாலியின் பாதங்களை வணங்கினான். வல்லார் கூறிய நெறிப்படியே ஆட்சியை ஏற்றவன் ஆதலின் 'மெய்ம்மை ஆம் ஆறினான்' என்றார். சுக்கிரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிய வேண்டிய காரணம் இன்மையால் எதிர்வந்து வணங்கினான். 61



வணங்கி - அவ்வாறு வணங்கி; அண்ணல் - அண்ணலே; இறைவ -தலைவா! நின் வரவு இலாமையால் - நீண்டகாலம் உன் வருகை இல்லாததால்; உணங்கி - மனம் வருந்தி; உன் வழிப்படர - உன் பின்னர்ப் பிலத்துவழிச் செல்ல; உன்னுவேற்கு - கருதிய எனக்கு; நும்முடைக்கணங்கள் - நும் அமைச்சராகிய வானரக் கூட்டத்தார்; இணங்கர்
இன்மையால்
- சம்மதிக்காமையோடு; காவல் உன் கடன்மை - 'எங்களை ஆட்சி புரிந்து பாதுகாப்பது உனது கடமையாகும்'; என்றனர் - என்று கூறினர்.

இச்செய்யுளில் 'அண்ணல்' என்றது முதல் அடுத்த செய்யுளில் 'பொறாய்' என்னும் அளவும், முன்னே வாலியினிடத்துச் சுக்கிரீவன் பேசியதை அனுமன் அறிந்து கூறியதாகும்.

தன்னினும் முன்னவனாதலின் 'அண்ணல்' என்றும், யாவர்க்கும் அரசனாதலின் 'இறைவ' என்றும் சுக்கிரீவன் விளித்தான். சுக்கிரீவன் நேர்மையான வழியில் செல்பவனாதலின், வாலி கேட்பதற்கு முன்னரே தன்மீது குற்றம் இல்லை என்பதை உணர்த்துதற்கு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு
வாலியிடம் கூறலாயினன். வாலிக்கு அமைச்சராய் இருந்தோர் கூறியதால் அரசேற்க நேர்ந்தது என்பதால் 'நும்முடைக் கணங்கள்' என்றான். தான் உண்மையில் வாலி சென்ற வழியிலே செல்ல நினைத்ததை 'உன் வழிப் படர உன்னுவேற்கு' என்ற தொடரால் உணர்த்தினான். 62



பூண் நிலாவு தோளினை - அணிகள் அசைந்து விளங்கும் தோள்களை உடையவனே! ஆணை அஞ்சி - வானரர்களின் கட்டளையை மறுப்பதற்கு அஞ்சி; இவ் அரசை எய்தி - இந்த அரசாட்சியை ஏற்று; வாழ் - வாழ்ந்து வந்த; நாண் இலாத - நாணம் இல்லாத; என் நவையை - என் குற்றத்தை;
பொறாய் -
பொறுத்துக் கொள்வாய்; நல்குவாய் - அருள்வாய்; என - எனச் சுக்கிரீவன் வேண்டவும்; கோணினான் - (வாலி) மனம் மாறுபட்டவனாய்; நெடுங்கொடுமை கூறினான் - மிகக் கடுமையான சொற்களைச் சொன்னான்.

வானரர்களின் விருப்பப்படி நடந்துகொண்ட செயல் அண்ணன் தன்னைத் தவறாக நினைப்பதற்கு இடம் அளித்ததால் 'நாணிலாத' என்றான். 'தகாதன செய்தற்கண் உள்ளம் ஒடுங்குதல்' எனப் பரிமேலழகர் நாணத்திற்கு இலக்கணம் சொன்னது கருத்தக்கது. சிறிது காலம் வாலிக்குரிய அரசை
ஆண்டதால் 'நவை' என்று குறிப்பிட்டான். தன்னையும் அறியாது நிகழ்ந்த செயலைக் கூறிப் 'பொறாய், நல்குவாய்' என மன்னிப்பு வேண்டினான். இங்ஙனம் நிகழ்ந்தது கூறி வேண்டியும் வாலி சினம் கொண்டான் ஆதலின்குற்றம் வாலியுடையது என்பதை அனுமன் உணர்த்தினான். 63



அடல் கடந்த தோள் - பகைவரின் வலிமையைப் போரில் கடந்து வெற்றிபெற்ற தோள்களை உடைய; அவனை அஞ்சி - வாலிக்குப் பயந்து; வெங்டல் கலங்கி - கொடிய குடல் கலங்கி; எம் குலம் ஒடுங்க - எம் வானர இனம் முழுமையும் அஞ்சி ஒடுங்கிநிற்க; முன் கடல் கடைந்த-
முன்பு திருப்பாற்கடலைக் கடைந்த; அக்கரதலங்
களால்- அந்தக் கைகளால்; உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத் தாக்கிக் கலக்கினான் (வாலி); இவன் உலைந்தனன் - சுக்கிரீவன் பெரிதும் வருந்தினான்.

வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி நடுங்கின. பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன் உடம்பைக் கலக்குதல் எளிது. ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால் உடல் கடைந்தனன்' என்றான். உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி உறுப்புகள் கலங்குமாறு செய்தல். கொடுமையான வார்த்தைகளைப் பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன் கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான். உடல் கடைதல்; இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது. 64



பற்றி - வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு; பழியை அஞ்சலன் - (தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்; வெஞ்சினம் முற்றிநின்ற - கொடிய கோபம் மிக்கு நின்ற; தன் முரண் வலிக்கையால் - தனது மிக்க வலிமையுடைய கையால்; எற்றுவான் - மோதுவதற்கு; எடுத்து எழுதலும் - உயரத் தூக்கி எழுந்த அளவில்; அற்றம் ஒன்று பெற்று - அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று; இவன் பிழைத்து - இந்தச் சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து; அகன்றனன் - அவ்விடம் விட்டு அகன்று ஓடினான்.

வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம். முரண் வலி - ஒரு பொருட்பன்மொழி. மிக்க வலிமை. சுக்கிரீவனின் அச்சத்தைப்
பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும். பழிக்கு அஞ்சாத வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது. 65

வாலிக்கு அஞ்சிய, சுக்கிரீவன் இரலை மலையில் வாழ்தல்



எந்தை - எம் ஐயனே! அவன் - அவ்வாலி; எயிறு அதுக்குமேல் - தன் பற்களைக் கடித்துக் கோபிப்பானாயின்; அந்தகற்கும் - யமனுக்கும்; ஓர் அரணம் - (பிழைத்துவாழ) பாதுகாப்பான ஓர் இடம்; இல்லை - இல்லை; முந்தை உற்றது - முன்னே (மதங்கமுனிவரால்) அடைந்ததாகிய; ஓர் சாபம்உண்மையால் - ஒரு சாபம் உள்ளதாதலின்; இந்த வெற்பின் வந்து - இந்தமலையில் வந்து; இவன் இருந்தனன் - சுக்கிரீவன் இருப்பானாயினன்.

வாலியின் சினத்திற்கு இலக்கானவர் யாவரேயாயினும் தப்பிப் பிழைப்பதற்கு உரிய இடமில்லை. எல்லா உயிர்களையும் கவரும் யமனுக்கும் பிழைக்க இயலாது என்பதால் வாலியின் வலிமை உணர்த்தப்பட்டது. அந்தகற்கும் - உம்மை, உயர்வு சிறப்பும்மை. எயிறு அதுக்குதல் - கோபக்குறியை உணர்த்தும் மெய்ப்பாடு. காரியம் காரணத்தின் மேல் நின்றது. வாலி, மதங்க முனிவரால் பெற்ற சாபத்தில் இம்மலைப் பகுதிக்கு வரஇயலாது.அதனால் சுக்கிரீவன் இம்மலையை அரணாகக் கொண்டு இதுகாறும் உயிர் பிழைத்திருந்தான் என்பதை உணர்த்தினான் அனுமன். வாலிக்கு மதங்க
முனிவர் இட்ட சாபத்தைத் துந்துபிப் படலத்தால் அறியலாம். அந்தகன் - உயிர்கட்கு அழிவைச் செய்பவன்;யமன். 66



எம் கடவுள் - எம் தெய்வமே! உருமை என்று - உருமை என்றுபெயர்பெற்று; இவற்கு உரிய - இச்சுக்கிரீவனுக்கு உரிய; தாரம் ஆம் - மனைவியாய் இருந்த; அருமருந்தையும்- கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்றவளையும்; அவன் - விரும்பினான் - அவ்வாலி விரும்பிக் கவர்ந்து
கொண்டான்; இவன் - சுக்கிரீவன்; இருமையும் துறந்து- அரசச் செல்வத்தையும் மனைவியையும் இழந்து; இருந்தனன் - இம்மலையில்இருந்தான்; இங்கு இது கருமம் - இங்குக் கூறிய இதுவே நடந்த
செய்தியாகும்; என்றனன் - என்று அனுமன் உரைத்தான்.

உருமை - சுக்கிரீவன் மனைவி. வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின் மகள். ருமை என்னும் வடசொல் தமிழில் உருமை ஆயது. அருமருந்தையும் - உம்மை உயர்வு சிறப்பொடு இறந்தது தழுவிய எச்சப்பொருளும் அமைந்தது. வாலி தனக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டதோடு, சுக்கிரீவனுக்கே உரியமனைவியையும் கவர்ந்தான் என வாலியின் கொடுமை கூறப்பட்டது. அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம். உவமை ஆகுபெயராய் உருமையைக் குறித்தது.
67

இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச் சூளுரைத்தல் கலித்துறை



பொய் இலாதவன் - பொய் கூறுதலை அறியாத அனுமன்; வரன் முறை - கூறவேண்டிய முறைப்படி; இம்மொழி புகல - சுக்கிரீவனைப் பற்றிய செய்திகளைக் கூற; ஐயன் - தலைவனும்; ஆயிரம் பெயருடை- ஆயிரம் திருநாமங்களை உடைய; அமரர்க்கும் அமரன் - தேவர்களுக்கு எல்லாம் மேம்பட்ட தேவனுமான இராமபிரானின்; வையம் நுங்கிய - (முன்பு பிரளய காலத்தில்) உலகம் முழுவதையும் விழுங்கிய; வாய் இதழ் துடித்தது - வாயின் உதடுகள் கோபத்தால் துடித்தன; கண்கள் - அவனது கண்களாகிய; செய்ய தாமரை மலர்- சிவந்த தாமரை மலர்கள்; ஆம்பல் அம்போது என - செவ்வாம்பல் மலர் போல; சிவந்த- சிவந்தன.

வாலி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்த செய்தியினையும் மறைக்காது உரைத்தமையால் 'பொய் இலாதவன்' என்றார். 'மெய்ம்மை பூண்டான்' (4801) என்று பின்னரும் அனுமன் கட்டப்படுவான். அறத்திற்கு மாறாக வாலி நடந்து கொண்டான் என அறிந்ததும் தாமரை மலர்க்கண்கள் மேலும் சிவந்ததால் 'ஆம்பல் போது எனச்சிவந்த' என்றார். தாமரை மலரின் செம்மையினும் செவ்வாம்பல் மலர் செம்மை மிக்கது என அறிய முடிகிறது. 68



ஈரம் நீங்கிய - அன்பு நீக்கிய; சிற்றவை - சிறிய தாயாகிய கைகேயி; சொற்றனள் என்ன - சொன்னாள் என்று; ஆரம் வீங்கு தோள் - முத்துமாலை அணிந்த பருத்த தோள்களை உடைய; தம்பிக்கு - தம்பியாகிய பரதனுக்கு; தன் அரசு உரிமைப் பாரம் - தனக்கே உரித்தான அரசபாரத்தை;
ஈந்தவன் -
அளித்தவனான இராமன்; பரிவு இலன் ஒருவன் - ''அன்பில்லாத ஒருவன்; தன் இளையோன் தாரம் - தன் தம்பியின் மனைவியை; வௌவினன்- கவர்ந்து கொண்டான்; என்ற சொல் - என்ற வார்த்தையை; தரிக்குமாறு உளதோ - (கேட்டுப்)பொறுத்திருக்கும் தன்மை உண்டாகுமோ? (ஆகாது).

இராமன் மாட்டு இயல்பாக அன்பு கொண்ட கைகேயி கூனியின் சூழ்ச்சியால் மாறியதால் 'ஈரம் நீங்கிய சிற்றவை' என்றார். ஆட்சியுரிமை மூத்தவனான இராமனுக்கே உரித்து ஆதலின் 'தன் அரசுரிமை' எனப்பட்டது. இச்செய்யுளால் தம்பி மாட்டு அன்பில்லாது, அவன் தாரத்தையும் கவர்ந்த
கொடிய செயலே மனைவியை இழந்த இராமன் வாலிபால் கொண்ட பகைமைக்கு முதன்மைக் காரணமாய் முன்னின்றது என்பதாம். இப்பாடல்கவிக்கூற்று. 69



உலகம் ஏழினோடு ஏழும் - பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும்; வந்து - திரண்டு வந்து; அவன் உயிர்க்கு உதவி - வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவிபுரிந்து; விலகும் என்னினும் - என்னைத் தடுக்குமாயினும்; வில்லிடை வாளியின் - என் வில்லில் பூட்டிய அம்பினால்; வீட்டி -
அவனை அழித்து; தலைமையோடு - வானரங்களுக்குத் தலைவனாகும் அரசாட்சியோடு; நின் தாரமும் - உனது மனைவியையும்; உனக்கு இன்று தருவேன் - உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்; புலமையோய் - அறிவில் சிறந்தவனே! அவன் உறைவிடம் காட்டு - அவன் வசிக்கும்
இடத்தைக் காண்பிப்பாய்; என்று புகன்றான் - என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான்.

பதினான்கு உலகில் உள்ளார் வந்து தடுப்பினும் வாலியைக் கொன்று ஆட்சியையும், மனைவியையும் மீட்டுத் தருவது உறுதி என இராமன் சுக்கிரீவனுக்கு உரைத்தான். முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் 'சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும், ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்' (2652) என இராமன் கூறியுள்ளமை காணலாம். அரச நீதிக்கு ஏற்பத் துணையையும் காலத்தையும் நோக்கி அடங்கியிருந்த சுக்கிரீவன் அறிவுடைமை பற்றிப் 'புலமையோய்' என விளித்தான். உலகம் - இடவாகுபெயர்; விலக்கும் என்பது எதுகை நோக்கி 'விலகும்' என விகாரப்பட்டு நின்றது. 'இன்று
தருவென்' என்றது கால வழுவமைதி; உறுதி குறித்தது. 'இன்றே தந்தேன்' என்று சொல்லியிருந்தாலும் அதுவே. 70



பேர் உவகைக் கடல் - (இராமன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில்) பெரிய மகிழ்ச்சியாகிய கடல்; பெருந்திரை எழுந்து - பெரிய அலைகளோடு பொங்கி எழுந்து; இரைப்ப - ஒலிக்க; அழுந்து துன்பினுக்கு - தான் அழுந்திடக் கிடந்த துயரமாகிய கடலுக்கு; அக்கரை கண்டனன் - எல்லை கண்டவனை; அனையான் - ஒத்து விளங்கும் சுக்கிரீவன்; இனி, வாலிதன் வலி - ''இனி வாலியின் வலிமை; வீழ்ந்ததே- அழிந்ததேயாம்''; என விரும்பா- என்று விருப்பமுற்று; மொழிந்த வீரற்கு- (தன்னிடம்) பேசிய இராமனிடம்; யாம் எண்ணுவது உண்டு-'நாங்கள் ஆலோசிக்க வேண்டுவது
ஒன்றுளது'; என மொழிந்தான் - என்று சொன்னான்.

இராமன் சொல்லைக் கேட்டதும் சுக்கிரீவன் பெரிதும் மகிழ்ந்தான் என்பதால் 'பேருவகைக்கடல் பெருந்திரை இரைப்ப' என்றார். பேருவகைக்கடல் என்பது உருவகம். 'அக்கரை' என்றதால் துயரமாகிய கடலுக்கு என உருவமாகக் கொள்ளல் வேண்டும். இராமன் உரையால் வாலியை இறந்துபட்டவனாகவே சுக்கிரீவன் உணர்ந்ததால் 'விழுந்ததே வாலி தன் வலி' எனப்பேசினான். விழுந்ததே - தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி. 71

அமைச்சர்களோடு கூடிச் சுக்கிரீவன் சிந்திக்க, அனுமன் பேசுதல்



இரவி தனையன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; அனைய ஆண்டு உரைத்து - அவ்வாறு அங்குச் சொல்லிவிட்டு; நினைவும் கல்வியும் - எண்ணமும் கல்வியும்; நீதியும் சூழ்ச்சியும்- நீதிநெறிகளும் ஆய்வுத்திறமும்; நிறைந்தார் - நிறைந்தவர்களாகிய; அனுமனே முதலிய அமைச்சர் - அனுமன் முதலான அமைச்சர்கள்; எனையர் - எத்துணைபேர் இருந்தனரோ; அன்னவரோடும் - அத்தனை பேருடனும்; வேறு இருந்தனன்- வேறிடத்தில் (ஆலோசனை செய்ய) இருந்தான்; அவ்வழி - அப்பொழுது; சமீரணன் மகன் - வாயு மைந்தனாகிய அனுமன்; உரைதருவான் - பேசலாயினான்.

வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டோ, இல்லையோ எனச் சுக்கிரீவன் ஐயுற்று அதைப்பற்றி ஆலோசிக்க அனுமன் முதலிய அமைச்சர்களை அழைத்துக் கொண்டு தனியிடத்தே சென்றான். அமைச்சர்களுக்குச் செயல்படுவதற்கேற்ற எண்ணமும், அறிவுத்திறனும், நீதிநெறியும், அரசன் ஆக்கத்திற்குத் தக்க சூழ்ச்சியும் வேண்டுதலின் அந்நான்கினையும் உடைய அமைச்சர் என்றார். அனுமனே - ஏகாரம் தேற்றப்பொருளில் மற்றையோரினும் அவனுக்குள்ள சிறப்பை
உணர்த்துவதாகும்.



உரவோய் - வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன் மனத்தில்; உள்ளதை - உள்ள கருத்தை; உன்னினேன் - (யான்) ஊகித்து அறிந்து கொண்டேன்; அன்ன வாலியை - அத்தகைய வலிமை வாய்ந்த வாலியை; காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் - யமனுக்குக் கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை; இன்ன வீரர்பால் இல்லை - இந்த வீரர்களிடத்தில் இல்லை; என்று அயிர்த்தனை - என்று ஐயம் கொண்டாய்; இனி யான் சொன்ன கேட்டு- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு; அவை கடைப்பிடிப்பாய் - அவற்றை உறுதியாகக் கொள்வாய்;
எனச் சொன்னான் -
என்று சொல்வானாயினன்.

உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன் அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான். காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது. அன்ன வாலி என்றது. எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம் பெற்ற வாலி என அவன் பெருமையைக் கூறியதாகும். இன்ன வீரர் - இங்கு வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும்.



தடக்கையில் - (இராமனது) பெரிய கைகளிலும்; தாளில் - பாதங்களிலும்; சங்கு சக்கரக் குறி உள - சங்கு சக்கரங்களின் ரேகைகள் உள்ளன; இத்தனை இலக்கணம் - இத்தனைச் சிறந்த இலக்கணம்; எங்கும் யாவர்க்கும் இல்லை - எவ்வுலகத்திலும் யார்க்கும் இருந்த தில்லை; செங்கண் வில் கரத்து - சிவந்த கண்களையும், வில்லேந்திய கரத்தையும் உடைய; இராமன் - ; அத்திரு நெடுமாலே - அப்பரம் பொருளாகிய திருமாலே ஆவன். ஈண்டு - இப்பொழுது; அறம் நிறுத்துதற்கு - அறத்தை நிலைநிறுத்துவதற்கு; இங்கு உதித்தனன் - இவ்வுலகத்தில் அவதரித்துள்ளான்;
இன்னும் -
மேலும் . . . .

இப்பாடலில் 'மேலும்' என்பது அடுத்த பாடலொடு இயைந்து பொருள் முடிபு கொள்ளும். கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர ரேகைகள் அமைவது உத்தம இலக்கணமாகும். அத்தகைய இலக்கணம் திருமாலுக்கே அமைவதாலும், இராமனிடத்தும் எல்லா நல்இலக்கணங்களும் பொருந்தி
இருந்தமையாலும், அத் திருமாலே இராமனாக அறத்தை நிலைநாட்டும் பொருட்டு இவ்வுலகில் தோன்றினன் என ஊகித்து உணரலாம் எனக் கூறினன்.



செறுக்கும் வன்திறல் - யாவரையும் வருத்துகின்ற மிக்க வலி மையை உடைய; திரிபுரம் - முப்புரங்களும்; தீ எழச் சினவி - நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு; கறுக்கும் வெஞ்சினக் காலன் தன் - கோபித்து (மார்க்கண்டேயன் மீது) கொடிய சினங்கொண்ட யமனுடைய; காலமும் -
ஆயுள் காலத்தையும்; காலால் அறுக்கும் - காலினால் உதைத்து அழித்துவிட்ட; புங்கவன் - மேலோனான சிவபிரான்; ஆண்ட - கையாண்ட; பேர் ஆடகத்தனி வில் - பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை; இறுக்கும் தன்மை - முறிக்கின்ற செயல்; அம்மாயவற்கு அன்றியும் -
அத்திருமாலுக்கு அல்லாது; எளிதோ - பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).

திரிபுரம் அழித்து, காலனையும் உதைத்த சிவபிரான் பற்றிய வில் என அவ்வில்லின் வலிமையும் பெருமையும் கூறி, அதனை வளைத்தவன் என இராமன் பெருமை கூறியவாறு. சீதையை மணக்க இராமன் வளைத்த வில்சிவன் வில். அறுக்கும்' என உணர்த்தினான். 7



இறையோய் - தலைவனே!என்னை ஈன்றவன் - என்னைப் பெற்ற தந்தையாகிய வாயுதேவன்; இவ்வுலகு யாவையும் - (என்னை நோக்கி) ''இவ்வுலகங்களையெல்லாம்; ஈன்றான் தன்னை - படைத்த பிரமனை; ஈன்றவதற்கு - (தன் உந்திக்கமலத்தில்) ஈன்றவனாகிய திருமாலுக்கு; அடிமை
செய் -
தொண்டு செய்வாய்.தவம் உனக்கு அஃதே - அதுவே உனக்குத் தவமாகும்; உன்னை ஈன்ற எற்கு - உன்னைப் பெற்ற எனக்கும்; உறுபதம் உளது - சிறந்த பதவி கிடைப்பதாகும்''; என உரைத்தான் - என்று சொன்னான்; இன்ன தோன்றலே - இந்த இராமனே; அவன் - அந்தத் திருமாலாகும். இதற்கு ஏது உண்டு - இவ்வாறு யான் கூறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு.

என்னை ஈன்றவன் என்றது வாயு தேவனை; யாவையும் ஈன்றான் - நான்முகன்; ஈன்றான் தன்னை ஈன்றவன் - திருமால். இங்கு இராமனைக் குறித்தது. 76



ஐய - தலைவனே! முன்பு - முன்னே (அக்காலத்தில் யான் என் தந்தையை நோக்கி); தோன்றலை அறிதற்கு - அப்பெருமானை நான் அறிந்து கொள்வதற்கு; முடிவு என் - உறுதியான உபாயம் யாது? என்று இயம்ப - என்று கேட்க; எவர்க்கும் துன்பு தோன்றிய பொழுது - (அவர்) ''யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்; உடன் தோன்றுவன் - உடனே அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்; அன்பு சான்று - அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க சான்றாகும்'' என உரைத்தனன் - என்று சொன்னான்; என் யாக்கை - - (அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல்; என்பு தோன்றல - எலும்புகள் உருத் தோன்றாதனவாக; உருகின எனில் - உருகின என்றால்; பிறிது எவனோ - இதற்கு மேல் வேறு சான்று எதற்கு? 77

பெரியோய் - சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்- மற்றும்; அன்னவன் பெருவலி ஆற்றலை - அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை; அறிதி என்னின் - அறிய விரும்புவாயானால்; உபாயமும் உண்டு - அதற்கு ஒரு வழி உள்ளது.; அஃது - அவ் உபாயமாவது; நெறியில் நின்றன - நாம் போகும் வழியில் நிற்பனவான; அருமரங்கள் ஏழில் - எய்துதற்கரிய மராமரங்கள் ஏழிற்; ஒன்று உருவ - ஒன்றைத் துளைக்கும்படி; இந்நெடியோன் - இந்த நெடியோனாகிய இராமனது; பொறி கொள் வெஞ்சரம் - நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று; போவது காண் - செல்வதே ஆகும்; எனப் புகன்றான் - என்று சொன்னான்.

மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன் அம்புக்கு உண்டாயின. அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த உபாயத்தை அனுமன் உரைத்தனன். வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி 78

நன்று நன்று எனா - (அனுமன் கூறியதைக் கேட்ட சுக்கீரிவன்) 'நீ சொன்னது நல்லது நல்லது' என்று மகிழ்ந்து; தன் தனித் துணை மாருதி - தனது ஒப்பற்ற துணையாக விளங்கும் அனுமனின்; நல் நெடுங்குன்றமும் நாணும் - நல்ல பெரிய மலைகளும் நாணும்படியான; தோளினை தழுவி -
தோள்கள் இரண்டையும் தழுவிக் கொண்டு; செம்மலைச் சென்று குறுகி - இராமனைச் சென்றடைந்து; யான் - - ; உனக்குச் செப்புவது - உனக்குச் சொல்வது; ஒன்று உளது என - ஒரு செய்தி உள்ளது'' என்று சொல்ல; இராமனும் - - ; அஃது உரைத்தி - ''அதனைச் சொல்வாய்''; என்றான் -என்று சொன்னான்.

அனுமன் கூறிய உபாயம் தனக்கும் ஏற்புடைத்தாக இருந்தமையால் அவனது அறிவின் திறம்பாராட்டும் வகையில் 'நன்று, நன்று' என்று கூறியதோடு அமையாது அவன் தோள்களைத் தழுவியும் தன் மகிழ்ச்சியைச் சுக்கிரீவன் புலப்படுத்தினான்.

அமைச்சர் பலருள் சுக்கிரீவனுக்கேற்ற ஒப்பற்ற துணையாய் இருப்பவன் ஆதலின் அனுமனைத் ''தன் துணைத் தனிமாருதி' என்றார். அனுமன் தோளினை 'எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்தெழுந்த தோளான்'' (3766) என்றது காண்க. நன்று நன்று - அடுக்கு வியப்பைக் குறிப்பது. குன்றமும் - உயர்வு சிறப்பும்மை. 79




ஞாயிறு, 17 ஜூலை, 2011

இராமன் சுக்கிரீவனை நண்பனாகக் கொள்ளுதல் (3913-3914)

இராமன் சுக்கிரீவனை நண்பனாகக் கொள்ளுதல் (3913-3914)

என்ற அக் குரக்கு வேந்தை - என்று கூறிய அந்தக் குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனை; இராமனும் இரங்கி நோக்கி - இராமனும் மனம் இரங்கிப் பார்த்து; உன்தனக்கு உரிய - உனக்கு உரிய; இன்ப துன்பங்கள் உள்ள- இன்ப துன்பங்களாக உள்ளனவற்றில்; முன்நாள் சென்றன போக-
இதற்கு முன் நீ அனுபவித்துக் கழிந்தன தவிர; மேல் வந்து உறுவன - இனி வந்து சேரும் துன்பங்களை; தீர்ப்பல்- நான் நீக்குவேன்; அன்ன நின்றன- இனி வருவனவாகிய இன்பதுன்பங்கள்; எனக்கும் நிற்கும் - எனக்கும் உனக்கும்; நேர் - சமமாகும்''; என மொழியும் நேரா - என்று
உறுதிமொழியும் கொடுத்து.

மற்று இனி உரைப்பது என்னே - மேலும் நான் இனிச் சொல்லக்கூடியது யாது உளது? வானிடை - விண்ணுலகிலும்; மண்ணில் - மண்ணுலகிலும்; நின்னைச் செற்றவர் - நின்னை வருத்தியவர் ; என்னைச் செற்றார் - என்னை வருத்தியவராவர்; தீயரே எனினும் - தீயவராகவே இருந்தாலும்; உன்னோடு உற்றவர் - உன்னோடு நட்புக் கொண்டவர்கள்; எனக்கும் உற்றார் - எனக்கும் நண்பராவர்; உன் கிளை - உன் உறவினர்; எனது - என் உறவினராவர்; என் காதல் சுற்றம் - என்
அன்புள்ள சுற்றத்தினர்; உன் சுற்றம் - உன் சுற்றத்தினராவர்; நீ என் இன் உயிர்த்துணைவன் - நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்'; என்றான் - என்றான்.

இராமன் சுக்கிரீவனைத் தன் உயிர் நண்பனாகக் கொண்டமையால் அவனுடைய பகைவர்களும் நண்பர்களும் சுற்றத்தினரும் தனக்கும் முறையே பகைவர், நண்பர், சுற்றத்தினர் ஆவர் எனக்கூறித் தன் நட்பின் உறுதித் தன்மையை உணர்த்தினான். 'தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும்
உற்றார்' என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான். சுக்கிரீவனின் உற்றார் நல்லவராக இருந்து, பின்னர்த் தீயராக மாறினும் அவர்களை உற்றாராகக் கொள்வதன்றி விட்டு நீங்குதல் இல்லை என இராமன் உறுதி கூறினான். ''

அனகன் சொன்ன வார்த்தை- குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன சொல்; எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்; மறையினும் - வேதவாக்கைக் காட்டிலும்; மெய் என்று உன்னா - உண்மையானதாகும் என்று எண்ணி; குரக்குச் சேனை ஆர்த்தது- குரங்குக்கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின்
புதல்வனான அனுமன்; மேனி - மேனியை; உரோமப் புளகங்கள்-மயிர்ச்சிலிப்புகள்; பொடித்துப் போர்த்தன - அரும்பி மறைத்து விட்டன; விண்ணோர் - தேவர்கள்; பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகம் சொரிந்தன- மேகங்கள் மழையைப் பொழிந்தன.

இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும், யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை மகிழ்ந்தது எனலுமாம். தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன். இராவண வதம் நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால் வானவர் பூமாரி பொழிந்தனர். இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம். 28

ஆண்டு எழுந்து - அப்பொழுது எழுந்திருந்து; அடியில் தாழ்ந்த - இராமனது திருவடிகளில் விழுந்து வணங்கிய; அஞ்சனை சிங்கம் - அஞ்சனை ஈன்ற சிங்கம் போன்ற அனுமன்; தூண்திரள் தடந்தோள் மைந்த - தூணைப்போலத் திரண்ட பெரிய தோள்களை உடைய தசரதனின் மகனே!
வாழி -
வாழ்க!தோழனும் நீயும் வாழி- தோழனாகிய சுக்கிரீவனும் நீயும் வாழ்க!ஈண்டு - இப்பொழுது (நீங்கள்); நும் கோயில் எய்தி - உமது மாளிகையை அடைந்து; இனிதின் - இன்பமாக; நும் இருக்கை காண- நுமது இருக்கையில் எழுந்தருளியிருத்தலைக் காண; வேண்டும் -
விரும்புகிறோம்; நும் அருள் என்- தங்கள் திருவுள்ளம் யாது?என்றான்-; வீரனும் - வீரனாகிய இராமனும்; விழுமிது என்றான்- 'சிறந்தது' என்று கூறி உடன்பட்டான்.

இராம சுக்கிரீவர் நட்புக் கொண்டமைக்கு அனுமன் மகிழ்ந்து வாழ்த்துக் கூறிச் சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு வரவேண்டும் என்று வேண்ட, இராமனும் அதற்கு உடன்பட்டான். மேலோரிடம் பேசுகையில் முதலில் வாழ்த்துக் கூறிப் பின்னர்ச் செய்தி கூறல் முறையாதலின் அனுமன் 'வாழி' என வாழ்த்திப் பின்பு பேசத் தொடங்கினான். சுக்கிரீவனும் இராமனும் நட்புரிமையோடுநெடுங்
காலம் வாழவேண்டும் என்ற விருப்பத்தால் 'தோழனும் நீயும் வாழி' என வாழ்த்தினான். உரிமை பற்றிச் சுக்கிரீவன் மாளிகையை 'நும்கோயில்' என இராமனை உளப்படுத்திக் கூறினான். 29

இரவி சேயும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கும்; இருவரும் - இராமலக்குவரும்; அரிகள் ஏறும் - குரங்குகளுக்குச் சிங்கம் போன்றவனான அனுமனும்; வெம் ஊகச் சேனைசூழ - கொடிய வானரச் சேனைகள் சூழ்ந்து வர; அறம் தொடர்ந்து - தருமதேவதை பின் தொடர்ந்து வந்து; உவந்து
வாழ்த்த -
மகிழ்ந்து வாழ்த்தவும்; நாகமும் - சுரபுன்னை மரங்களும்; நரந்தக்காவும் - நரந்தம் என்னும் மரங்களின் சோலையும்; நளின வாவிகளும் - தாமரை பொய்கைகளும்; நண்ணி - பொருந்தி; போக பூமியையும் ஏசும் - இன்பத்தை அனுபவிக்கும் போக பூமியாகிய சுவர்க்க
லோகத்தையும் இகழ்கின்ற; புது மலர்ச் சோலை புக்கார் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையை அடைந்தனர்.

அழிந்து போவதாய் இருந்த தன்னை இராமசுக்கிரீவர் நட்புக் காக்க இருப்பதால், தருமதேவதை அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்த்தியது. சுவர்க்க லோகத்தில் பெறும் இன்பத்தினும் சிறந்த இன்பம் தரும் இடமாதலின் 'போக பூமியையும் ஏசும் புதுமலர்ச்சோலை' என்றார். தன் மாளிகைக்கு அழைத்துச் செல்வோன் ஆதலின் 'சுக்கிரீவனை முன்னவரும், விருந்தினர்களாகச் செல்வதால் இராமலக்குவரை அடுத்தும், அன்பும் அடக்கமும் கொண்டு இராமலக்குவர் பின் செல்லும் அனுமனை அவ்விருவர்க்குப் பின்னும், ஏனைய வானரங்களை அனுமனுக்குப் பின்னும் செல்லுமாறு வைத்துள்ள வைப்பு முறை நயம் பொருந்தியதாகும். 30

ஆரமும் அகிலும் துன்றி - (அச்சோலை) சந்தன மரங்களும் அகில் மரங்களும் நெருங்கப் பெற்று; அவிர் பளிக்கு அறை அளாவி - விளக்கம் மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று; நாரம் நின்றன போல் - அவை தண்ணீர் நிறைந்து நின்றவை போல; தோன்றி - காணப்பட்டு (விளங்க);
நவமணித் தடங்கள் -
நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்; நீடும் பாரமும் - நீண்டகரைகளிலும்; மருங்கும் - பக்கங்களிலுமுள்ள; தெய்வத்தருவு - தெய்வத் தன்மையுடைய மரங்களில்; நீர்ப்பண்ணை ஆடும்- நீர் விளையாட்டைச் செய்யும்; சூர் அர மகளிர் - தெய்வ
மகளிர்தம்; ஊசல் துவன்றி - ஊஞ்சல்கள் நெருங்கிய; சும்மைத்து - ஆரவாரத்தைஉடையது.

சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி, தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல் விளையாடப் பெற்ற சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது. பளிக்கு - பளிங்கு; அறை - பாறை; நாரம் - தண்ணீர். இது வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு - தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை
'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும் அறியலாம். 31

அயர்வுஇல் கேள்விசால் - தளர்வு இல்லாத கேள்வியால் நிரம் பப்பெற்ற; அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு முன்; பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; பொலிவு இல் பான்மை போல் - மேன்மையில்லாது; விளங்குதல் போல; குயிலும் மாமணிக் குழுவும் சோதியால் - அச்சோலையில் பாதிக்கப்பட்ட சிறந்த
மணிகளின் திரண்ட ஒளியால்; வெயிலும் - சூரிய ஒளியும்; வெள்ளி வெண் மதியும்- வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்; மேம்படா - மேம்பட்டுத் தோன்றவில்லை.

இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின் ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது. அயர்வு - ஐயம்திரிபு. கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்' என்றார். வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை
ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை. ''வாசகம் வல்லார் முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்'' (895) ''எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்'' (நன்னெறி - 21) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 32

ய அன்னது ஆம் - இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய; இனிய சோலைவாய் - இனிமைமிக்க சோலையிடத்து; மேய மைந்தரும் - சென்றடைந்த இராமலக்குவரும்; கவியின் வேந்தனும் - வானரத் தலைவனாகிய சுக்கிரீவனும; தூய பூ அணை - தூய்மையான மல ரணைமீது;
பொலிந்து தோன்றினார்-
சிறக்க வீற்றிருந்தவர்களாய்; ஆய அன்பினோடு- பொருந்தியுள்ள அன்போடு; அளவளாவுவார் - பேசலாயினர்.

சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அனை பிறவற்றினும் பொலிவு மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார். அளவளாவுதல்- நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன் உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் ஒருங்கமர்ந்து அன்பொடு
உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது.

கனியும் - பழங்களும்; கந்தமும் - கிழங்குகளும்; காயும்- காய்களும்; தூயன இனிய யாவையும் - தூய்மையாயும் இனிமையாயும் உள்ள யாவற்றையும்; கொணர - (வானரர்கள்) கொண்டுவர; யாரினும் புனிதன் - யாவரினும் தூய்மையானவன் ஆகிய இராமன்; மஞ்சனத் தொழில் புரிந்து-நீராடுதலைச் செய்து; பின் இனிது இருந்து - பின்னர் இனிமையாக இருந்து;
நல் விருந்தும் ஆயினான் -
சுக்கிரீவற்கு நல்ல விருந்தாளியும் ஆனான். விருந்துண்டான்).

சுக்கிரீவன் தன் பரிவாரங்களைக் கொண்டு விருந்து அளிக்க, இராமன் நீராடி விருந்துண்டான். கந்தம் - கிழங்கு - வடசொல். விருந்து- புதுமை - விருந்தினர்களைக் குறித்ததால் உவம ஆகுபெயர். விருந்தும் - உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை - நண்பன் ஆனதை உடன் தழுவியது. 34


அம்மெய்ம்மை அன்பினோடு இருந்து- அத்தகைய உண்மையான அன்புடனே இருந்து; இறைவன் - இராமன்; விருந்தும் ஆகி - (வானரர்க்குச்) சிறந்த விருந்தினனாகி; நோக்கி - தனக்கு அவர்கள் விருந்து நடத்தியதைப் பார்த்து; நொந்து - (சுக்கிரீவன் மனைவியைக் காணாமையால்)
மனம் வருந்தி; சிந்தியா - ஆலோசித்து; பின் - பின்னர்; பொருந்தும் நல்மனைக்கு- (சுக்கிரீவனைப் பார்த்து) பொருந்திய நல்ல இல்லற வாழ்க்கைக்கு; உரிய பூவையைஉரியவளான மனைவியை; நீயும் பிரிந்துளாய் கொல் - (என்னைப்போல) நீயும் பிரிந்துள்ளாயோ? என்றான் - என்று
வினவினான்.

விருந்தினனாகிய தன்னைச் சுக்கிரீவன் மனைவி இல்லாமல் உபசரிப்பதைக் கண்டு 'நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்' என இராமன் வினவினான். மனையாள் இல்லாத இடத்து விருந்தோம்புதல் சிறக்காது என்பர். மகளிரும் விருந்தோம்புதலைத் தலையாய கடனாகக்
கொண்டனர் என்பதை 'வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே?' (67) என்ற அடிகள் உணர்த்தும். ''விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'' (சிலம்பு - 2 - 16 - 73) என்ற கண்ணகியின் வருத்தமும் விருந்தோம்பலில் மகளிர் பங்கை உணர்த்தும். மனை - இல்லற வாழ்க்கை; இடவாகுபெயர்; பூவை - உவமை ஆகுபெயர்; நீயும் - உம்மை இறந்தது தழுவிய எச்ச
உம்மை. 35

என்ற வேலையில் - என்று இராமன் சுக்கிரீவனை வினவிய பொழுதில்; மாருதி - அனுமன்; குன்று போல எழுந்து நின்று - மலை போல எழுந்து நின்று; இருகை கூப்பினான் - இரண்டு கைகளையும் கூப்பியவனாய்; நின்ற நீதியாய் - (இராமனை நோக்கி) 'நிலை பெற்ற நீதியை உடையவனே! யான் உனக்கு - நான் உனக்கு; உரைப்பது ஒன்று உண்டு - சொல்ல வேண்டுவது
ஒன்று உண்டு; நெடிது கேட்டி - அதனைத் தொடக்கம் முதல் இறுதி வரை கேட்பாயாக'; எனா - என்று கூறி . . . .

தன் மனைவியை இழந்த செய்தியைச் சுக்கிரீவன் தானே கூறுதல் தகுதி அன்று என்று கருதி, அனுமன் அதைக் கூறினான். விருந்தினரை மனைவியுடன் இருந்தே உபசரித்தல் இல்வாழ்வானுக்கு முறை என்பதை உணர்ந்தே இராமன் வினாவினான் என்பதைக் குறிப்பிட 'நின்ற நீதியாய்' என
விளித்தான். 'என்று கூறி' (எனா) என்ற எச்சம் மேல்வரும் அனுமன் கூற்றுகை நோக்கி நின்றது. 36

வாலியின் பெருமை கூறல்

நாலு வேதம் ஆம் - நான்கு வேதங்களாகிய; நவை இல் ஆர்கலி - குற்றமற்ற கடலுக்கு; வேலி அன்னவன் - வேலியைப் போலப் பாதுகாவலாய் உள்ளவனும்; மலையின் மேல் உளான் - கைலாய மலையின்மேல்வீற்றிருப்பவனுமாகிய; சூலி தன் - சூலப்படையுடைய சிவபிரானின்; அருள்
துறையின் -
கருணையின் வழியில்; முற்றினான் - முதிர்ந்தவனாகிய; வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற வலிமை உடையவனாய்; வாலி என்று உளான் - வாலி என்று ஒருவன் உள்ளான்.

பரப்பாலும் பேரொலியாலும் வேதங்கள் ஆர்கலி எனப்பட்டன. சிவபிரான் நான்கு வேதங்களாகவும், வேதப் பொருளாகவும் விளங்கி, வேதங்களைக் காப்பதால் நான்கு வேதங்களுக்கும் வேலி அன்னவன் என்றார். 'நால் வேதன் காண்' (தேவாரம்-6-8-3), 'மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்
தன்னை' (தேவாரம்-6-3-4) என்ற அடிகளைக் காண்க. சூலி - சூலாயுதத்தை உடையவன். அருள்துறையின் முற்றினான் - சிவபிரானின் அருளைப் பெற்றவன் என்பது பொருள். வாலி சிவபக்தன் என்பதை, 'அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்' (3625) ''பஞ்சின் மெல்லடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும், அஞ்சலித்து அறியாச் செங்கை ஆணையாய்'' (4086) என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளாலும், தாரை புலம்பலிலும் (4101) காணலாம். திருவடகுரங்காடு துறை, திருக்குரங்கணில் முட்டம் என்னும் தலங்களில் வாலி சிவபிரானை வழிபட்டதாக அத் தல புராணங்கள்உணர்த்துகின்றன. 37

கழறு தேவரோடு- சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர் களோடு; அவுணர் - அவுணர்களின்; கண்ணின் நின்று - கண்முன் நின்று; உழலும்மந்தரத்து- (மத்தாகிச்) சுழல்கின்ற மந்தரமலையின்; உருவுதேய - வடிவம் தேயவும்; அழலும் கோள் அரா - சீறிக்கோபிக்கும் வலிய (கடைகயிறாகிய)
வாசுகியென்னும் பாம்பின்; அகடு தீ விட - வயிறு நெருப்பைக் கக்கவும்; சுழலும் வேலையை - அலைகின்ற திருப்பாற்கடலை; முன் - முற்காலத்தில்; கடையும் தோளினான் - (தான் ஒருவனாகக்) கடைந்த தோளினை உடையவன்.

வலிமையும் வரங்களும் பெற்று தேவ அசுரர்களால் செய்ய முடியாத செயலை வாலி தான் ஒருவனாகவே செய்து முடித்தான் என்பதால் அவனது பெருவலி பெறப்படுகிறது. திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அசுரரும் முயன்று வலியிலராய் நிற்க, அங்கு வந்த வாலி, அவர்கள் வேண்டுதலால் தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்தான் என்பது வரலாறு. இச்செயலைப் பின்னரும் ''வேலையை விலங்கல் மத்தில், சுற்றிய நாகம் தேய அமுது எழக் கடைந்த தோளான்'' (5257) என்று அனுமன் புகழ்ந்து பேசுவதைக் காணலாம். இவ்வரலாறு காஞ்சிப்புராணத்து மணிகண்டேசுரப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 38

நிலனும் - நிலமும்; நீரும் - நீரும்; நெருப்பும் - நெருப்பும்; காற்றும்- காற்றும்; என்று ஆய் - என்று பொருந்திய; உலைவு இல் பூதம் - அழிதல் இல்லாத பூதங்கள்; நான்கு உடைய - நான்கினுடைய;
ஆற்றலான் - ஆற்றலைத் தான் ஒருவனே பெற்றவன்; அலையின் வேலை - அலைகளைஉடைய எல்லைப்புறக் கடல்கள்; சூழ் கிடந்த - சூழ்ந்து கிடந்ததான; ஆழிமாமலையின் நின்றும் - பெரிய சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்து; இம்மலையின் வாவுவாம் - இங்குள்ள மலையில்
தாவும் தன்மையுடையவன்.

நிலம் முதலிய நான்கு பூதங்களின் ஆற்றலோடு, சக்கர வாளகிரியினின்று இங்குள்ள மலையில் தாவும் வல்லமையுடையவன் வாலி என்பது உணர்த்தப்பட்டது. பூமியைச் சூழ்ந்துள்ள எல்லாக்கடல்கட்கும் அப்பால் வட்டவடிவமான சக்கரவாள மலை சூழ்ந்துள்ளது என்பது புராண
மரபு. நிலத்திற்கு நீரும், நீர்க்கு நெருப்பும், நெருப்புக்குக் காற்றும், காரணமாதலால் அம்முறைப்படி வைத்தார். ஐந்து பூதங்களுள் ஆகாயத்தைக் கூறாது விடுத்தது, அதற்கு வடிவமும் ஆற்றலும் புலப்படத் தோன்றாமையின் என்க.
39

கிட்டுவார் பொரக் கிடைக்கின் - போர்கருதி தன் எதிரே வருபவர் கிடைக்கப்பெற்றால்; அன்னவர் பட்ட நல்வலம்- அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில்; பாகம் எய்துவான் - பாதியைத் தான் அடைவான்; எட்டு மாதிரத்து இறுதி - எட்டுத் திக்கு எல்லையிலும்; நாளும் உற்று - நாள்தோறும் சென்று; அட்ட மூர்த்தி - அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபிரானின்; தாள்பணியும் - திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் - ஆற்றலையுடைவன்.

வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு சிவன்பால் வரம்பெற்றிருந்தான். இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன் வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன் கூற்றாலும் அறியலாம். அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் என்பன. இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்; சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான். நாளும் எட்டுத் திசைகளுக்குச்
சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்' என்றார். வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால் உணர்த்தப்படுகின்றன. 40

அவன் முன்னர் - அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக; கால் செலாது - காற்றுச் செல்லாது; அவன் மார்பில் - அவ்வாலியின் மார்பில்; கந்தவேள் வேல் செலாது - முருகப்பிரானின் வேலும் நுழையாது; வென்றியான் - வெற்றியை உடையவனான அவ்வாலியின்; வால் செலாத வாய் அலது- வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்); இராவணன் கோல் செலாது - இராவணனது ஆட்சி செல்லாது; அவன் குடை செலாது - அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.

வாலியின் விரைந்த செலவையும், அவனது வன்மை, வென்றிகளையும் இப்பாடல் உணர்த்துகிறது. கால் - காற்று. வலிமையில் சிறந்தவன் வாயு தேவன். அந்தக் காற்றும் வேகத்தில் வாலியின் வேகத்திற்குத் தோற்றுவிடும் என்பது கருத்து. சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களாய்க் கிடந்து பார்வதிதேவியால் ஓருருவம் ஆக்கப்பட்டமையால் 'கந்தன்' எனப்
பெயர்பெற்றான். கந்தவேள் - இருபெயரொட்டு; கந்தனாகிய வேள். வேள் -வேட்கையை உண்டு பண்ணுபவன். இச்சொல் மன்மதனுக்கும் பெயர் ஆதலால் அதனை விலக்குதற்குக் 'கந்தவேள்' என்றார். கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த முருகன் வேலும் வாலியின் மார்பைத் துளைக்காது என்பதால் வாலியுடைய மார்பின் வன்மை புலப்படும்.

வென்றியான் - வாலி - இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும் வென்ற இராவணனது கோலும் குடையும் வாலியின் வாலி சென்ற இடத்துச்செல்லாது என வாலியின் வீரமிகுதி கூறப்பட்டது. முன் அவ்வாலியின் வாலில் கட்டுண்டு இராவணன் இடர்ப்பட்டவனாதலின், அவ்வாலுக்கு அஞ்சி
அவ்விடம் செல்லமாட்டான்; அவ்வாலுக்கே அஞ்சுபவன் வாலியின் தோள்வலிக்கு எதிர்நிற்கமாட்டான் என்பது கருத்து. வாலியின் வாலுக்கு இராவணன் அஞ்சுபவன் என்பதை ''வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் விளிந்தது அன்றே'' (5888), 'நிறையடிக் கோல வாலின் நிலைமையை நினையுந்தோறும் பறையடிக்கின்ற அந்தப் பயம்மிகப் பறந்ததன்றே' (4084)
என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளால் முறையே அறியலாம். 'வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்று இராவணன் கூறுவதும் காண்க. பின்னர் வாலியும் இராவணனும் நட்புக்கொண்டனராதலின் இராவணனைக் கொல்வதற்கு வாலியைக் கொல்வது இன்றியமையாதது என்பது புலப்படுகிறது.
41

அவன் - அவ்வாலி; பேருமேல் - இடம் பெயர்ந்து எழுவானானால் (அந்த அதிர்ச்சியில்); மேருவே முதல் கிரிகள் - மேரு முதலிய பெரிய மலைகளெல்லாம்; வேரொடும் பேருமே - வேரொடு இடம் விட்டுப் பெயர்ந்து போகும்; அவன் பெரிய தோள்களால் - அவனது பெரிய தோள்களால்; நெடுங்காரும், வானமும் - பெரிய மேகங்களும், ஆகாயமும்; கதிரும் நாகமும் - சூரிய, சந்திரர்களும், விண்ணுலகமும்; தூருமே - மறைந்து போய்விடும்.

வாலி இயல்பாக அடிவைத்துச் செல்லுகையில் அவ்வதிர்ச்சியைத் தாங்காது பெரிய மலைகளும் நிலைகுலைந்துவிடும் என அவனது வேகத்தின் பெருமை கூறப்பட்டது. அவனுடைய தோள்கள் மிக உயர்ந்து நிற்றலால், மேகம் முதலியன அத்தோள்களில் மறையும் என அத்தோள்களின் பருமையும்
நெடுமையும் உயர்வுநவிற்சி உத்தியால் உணர்த்தப்பட்டன.

'பெயருமேல் நெடும்பூதங்கள் ஐந்தொடும் பெயரும்' (6201) என்ற இரணியன் ஆற்றலை ஒப்பிட்டுக்காண்க. மேருவே - ஏகாரம் உயர்வு சிறப்பு; பேரும் - பெயரும் என்பதன் மரூஉ. 42

பண்டை நாள் - முன்பு; பார் இடந்த - பூமியைத் தன் கொம்பால் குத்தி எடுத்த; வெம்பன்றி - சினம்மிகுந்த வராகத்தையும்; நீர் கடைந்த - (மந்தர மலையாகிய மத்தை அழுத்தாமல் தாங்கியிருந்து) கடலைக் கடந்த;
பேர் ஆமை -
பெரிய கூர்மத்தையும்; நேர் உளான் - வலிமையால் நிகர்ப்பவன்; மார்பு இடந்த - இரணியனின் மார்பினைப் பிளந்த; மா எனினும் - நரசிங்கமே வந்ததாயினும்; அவன் - அவ்வாலியின்; தார்கிடந்த
தோள் -
மாலையணிந்த தோள்களை; தகைய வல்லதோ - அடக்கக் கூடிய வலிமையுடையதாகுமோ? (ஆகாது).

வாலி பூமியைப் பெயர்க்கும் ஆற்றலும், மலையைத் தாங்கும் வன்மையும், கடலைக்கடையும் திறலும் உடையவன் என்பது இதனால் பெறப்பட்டது. 'பண்டை நாள்' என்பது இடைநிலை விளக்காய் முன்னும்
சென்று பொருந்தியது. இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கத்திற்கும் வாலியின் தோள் வலிமையை அடக்க இயலாது என வாலியின் தோளாற்றலைக் கம்பர் எடுத்துரைக்கிறார். திருமாலின் அவதாரமான
இராமனும் வாலிக்கு எதிர்நின்று போர் புரியாது மறைந்து நின்று வெல்வது ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 43

அனந்தனும் - ஆதிசேடனும்; படர்ந்த நீள்நெடும் தலைபரப்பி - ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக்கொண்டு; மீது - அத்தலைகளின் மேலே; அடர்ந்து பாரம் வந்துஉற - நெருங்கிப் பாரம் மிகுதியாகப் பொருந்தியிருக்க; இடந்து - (நின்று தாங்க முடியாமல்) கீழே கிடந்து; இப்புவனம் நாள்எலாம் - இப் பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்);
தாங்கும் -
தாங்குவான்; இக்கிரியை மேயினான் - இந்தக் கிட்கிந்தை மலையில் வாழும் வாலியோ; நடந்து தாங்கும் - நடந்து கொண்டே அப்பூமியைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடையவன்.

பூமியின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன் வருந்திக் கிடந்து தாங்கிக் கொண்டிருக்க, ஒரு தலை உடைய வாலி நடந்து கொண்டு எளிதாகத் தாங்குவான் எனக்கூறி ஆதிசேடனை விட வாலி வலிமை மிக்கவன் என்பது உணர்த்தப்பட்டது. இது வேற்றுமை அணி பொருந்தியது. கிட்கிந்தை அருகில் தோன்றுவதால் 'இக்கிரி' என்றான்.
அனந்தனும் - உம்மை உயர்வுசிறப்பு. 44


அடலின் வெற்றியாய் - வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே! தொடர - இடைவிடாமல்; கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக்
கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது செல்வதும்- தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வொலி; சுளியும் என்று அலால் - சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆவவோ - பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல).

இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது -
எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும் மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால்
ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும்
கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும்.அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. 45










திங்கள், 11 ஜூலை, 2011

கம்பராமாயணம் - நட்புக் கோட் படலம்

கம்பராமாயணம் - நட்புக் கோட் படலம்

அனுமன், சுக்கிரீவனிடம் இராமன் சிறப்புகளைக் கூறுதல்

போன - (அவ்வாறு) சென்ற; மந்தர மணிப்புயம் - மந்தர மலை போன்ற அழகிய தோள்களால விளைந்த; நெடும்புகழினான் - மிக்க புகழையும் உடைய அனுமன்; மானவன் குணம் எலாம் - மனுக்குலத்துப் பிறந்த இராமனுடைய குணங்கள் எல்லாவற்றையும்; நினையும் மாமதியினான்
-
(எப்போதும்) சிந்திக்கும் பேரறிவு உடையவனாய்; யானும், என் குலமும் - 'நானும், எனது குலத்தினரும்; இவ்வுலகும் உய்ந்தனம் - இந்த உலகும் பிழைத்தோம்'; எனா - என்று சொல்லிக் கொண்டே; தன் ஆன - தன்தலைவனாகிய; பொருசினத்து அரசன் மாடு - போர்செய்தற்குரிய சீற்றத்தை உடைய மன்னன் சுக்கிரீவனிடம்; அணுகினான் - வந்தடைந்தான்.

அனுமன் தான் சென்ற காரியம் செவ்வனே முடிந்தது என்பதைக் குறிக்கும் வகையில் 'யானும் என் குலமும் இவ்வுலகும் உய்ந்தனம்' என்றான். தான் முதலில் சென்று இராமலக்குவரைக் கண்ட சிறப்பால் 'யானும்' என முதலில் தன்னைத் தனியே கூறினான். வாலியை வென்று வானரக் கூட்டத்தைப் பிழைக்கச் செய்வான் என்பதால் 'என் குலமும்' என்றும் அரக்கர் அழிதல் உறுதி என்பது தோன்ற 'இவ்வுலகும் உய்ந்தனம்' என்றும் கூறிச் சென்றான்.

ஆலம் உண்டவனின் நின்று - (அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட சிவபெருமானைப்போல நின்று; அருநடம் புரிகுவான் - அரிய நடனம் ஆடுபவனாய்; விரை செய் தார்- வாசனை மிக்க மாலையை உடைய; வாலி என்ற அளவு இலா - வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத; வலியினான்- வலிமை உடையவனின்; உயிர்தெற- உயிரை அழிக்க; காலன் வந்தனன் - யமன் வந்துவிட்டான்; இடர்க்கடல் கடந்தனம் - (ஆதலால்) நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம்; எனா - என்று; மேலவன் திருமகற்கு- வானத்தில் செல்லும் சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு; உரை செய்தான் - உரைத்தான்.

மண் உளார் - (இராமலக்குவர்) மண்ணுலகத்தில் உள்ள மனிதர்களும்; விண் உளார் - விண்ணுலகத்துள்ளோராகிய தேவர்களும்; மாறு உளார் - இவ்விரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்து நாகரும்; வேறு உளார் - அவற்றிற்கும் வேறான உலகங்களில் இருப்பவர்களும்; திசை உளார்- எட்டுத்திசையிலும் உள்ளவர்களும்; எண் உளார் - (ஆகிய இவர்களின்)மனத்தில் உள்ளவர்களும்; இயல் உளார் - செயலிலே இருப்பவர்களும்; இசை உளார் - சொல்லிலே உள்ளவர்களும்; கண் உளார் ஆயினார் - கண்ணிலே இருப்பவர்களும் ஆவார்கள்; பகை உளார் -
தமக்குப்பகைவர்களே உடையவர்களும்; கழிநெடும் புண் உளார் - அப்பகைவர்களால் உண்டாக்கப்பட்ட மிகப்பெரிய புண்களை உடையவர்களுமாய்; ஆர் உயிர்க்கு - தம்மை அடைந்தவர்களின் அரிய உயிர்க்கு; அமுதமே போல் உளார் - அமிழ்தத்தைப் போன்றவரும் ஆவர்.

பாழியால் - தன் வலிமையால்; உலகு எலாம்- எல்லா உலகங்களும்; ஒரு வழிப் படர- தன் ஒரு குடைக்கீழ் நடக்க; வாழ் ஆழியான் - ஆட்சி செய்து வாழும் ஆணைச்சக்கரத்தை உடையவனும்; சூழிமால் யானையார் - முகபடாம் அளிந்த யானைப்படையை உடைய அரசர்கலெல்லாம்; தொழு
கழல் தயரதன் -
வந்து தொழுகின்ற கழல் அணிந்த அடிகளையும் உடையவனான தசரதனின்; மைந்தர் - புதல்வர்கள்; பேர் அறிவினார் - பேரறிவினையுடையவர்கள்; அழகினார் - பேரழகு உடையவர்கள்; ஊழியால் எளிதின் - முறைமையாக எளிதில்; நிற்கு அரசு தந்து - உனக்கு அரசாட்சியை அளித்து; உதவுவார் - உதவி செய்வார்கள்.

நீதியார் - (அவர்கள்) நீதியை மேற்கொண்டவர்கள்; கருணையின் நெறியினார் - அருள் நெறியில் ஒழுகுகின்றவர்கள்; நெறிவயின்- அந்த நீதி வழியினின்றும்; பேதியா நிலைமையார் - மாறுபடாத உறுதியை உடையவர்கள்; எவரினும் பெருமையார் - எல்லோரைக் காட்டிலும் மிக்க பெருமை உடையவர்கள்; போதியாது- எவராலும் கற்பிக்கப்படாமல்; அளவுஇலா உணர்வினர் - இயல்பாகவே அமைந்த அளவில்லாத அறிவினைப் பெற்றவர்கள்; புகழினார் - பெரும்புகழ் வாய்ந்தவர்கள்; காதி சேய் தரு - காதி என்பானின் மகனாகிய விசுவாமித்திரர் கொடுத்த; நெடுங்கடவுள் வெம்படையினார் - தெய்வத்தன்மை பொருந்திய கொடிய படைக்கலங்களைப் பெற்றவர்கள்.

வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம் இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை; விளிந்து உருள - இறந்து தரையில் உருளுமாறு; வில் கோலி - வில்லை வளைத்து; அக்கொடுமையாள்- அக்கொடியவளின்; புதல்வனைக் கொன்று- மகனான சுபாகுவைக் கொன்று; தன்கால் இயல் பொடியினால்- தன் கால்களில் பொருந்திய தூளியினால்; நெடிய கல் படிவம் ஆம்- நீண்ட கல் வடிவமாகக்கிடந்த; ஆலிகைக்கு - அகலிகைக்கு; அரிய பேர் உரு - பெறுதற்கரிய சிறந்த உருவத்தை; அளித்து அருளினான்- கொடுத்து அருள் செய்தான்.

நல் உறுப்பு அமையும் - நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த; நம்பி யரில் முன்னவன் - அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்; மிதிலை புக்க அனைய நாள் - மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்; எல் உறுப்பு - ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய; அரிய பேரி எழுசுடர்க் கடவுள்தன் - அரிய பெரிய சூரிய பகவானின்; பல் இறுத்தவன்- பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்; வலிக்கு அமை - வலிமைக்குஏற்ப அமைந்த; தியம்பகம் எனும்வில் - 'திரியம்பகம்' என்று சொல்லப்பெறும் வில்லை; நயந்து - (வளைக்க) விரும்பி; இறுத்து அருளினான் - ஒடித்து அருளினான்.

உளை வயப் புரவியான் - பிடரி மயிரை உடைய குதிரைப்படை கொண்ட தசரதன்; உதவ - அரசை அளிக்க; உற்று - ஏற்றுக் கொண்டு; ஒருசொலால் - (பின்னர்) சொல் ஒன்றால்; அளவு இல் கற்பு உடைய சிற்றவை- அளவில்லாத (உயர்ந்த) கற்புடைய சிற்றன்னையாகிய கைகேயி; பணித்தருளலால் - கட்டளையிட்டு அருளியதால்; வளையுடைப் புணரி சூழ்- சங்குகளை உடைய கடலால் சூழப்பட்ட; மகிதலத் திரு எலாம் - நிலவுலகை ஆளும் செல்வம் எல்லாம்; இளையவற்கு உதவி - இளையவனாகிய பரதனுக்கு அளித்து; இத்தலை எழுந்தருளினான் - இக்காட்டிற்கு வந்துள்ளான்.

இவ் இராகவன் - இந்த இராமன்; தெவ் இரா வகை - பகைவர்களே இல்லாதபடி செய்த; நெடுஞ்சிகை விரா மழுவினான்- மிக்க சுவாலை பொருந்திய மழுவாயுதத்தை உடையவனாகிய; அவ் இராமனையும்- அந்தப் பரசுராமனையும்; மாவலி தொலைத்து - (அவனுடைய) மிக்க வலிமையை அழித்து; அருளினான் - (அவனைக் கொல்லாது) அருள் செய்தான்; வெகுண்டு எழும் - சினந்து எதிர்த்து வந்த; இரா அனையன் ஆம் - இருளைப் போன்றவனாகிய; அவ்விராதனை - அந்த விராதனையும்; இரா வகை - இவ்வுலகத்தில் இல்லாதபடி; துடைத்து அருளினான் - அழித்து
அருளினான்.

கரன் முதல் கருணை அற்றவர் - (இந்த இராமன்) கரன் முதலான இரக்கமற்ற அரக்கர்களுடைய; கடற் படையொடும் - கடல் போன்ற பதினாலாயிரம் படை வீரர்களோடும்; சிரம் உக - (அவர்கள்)
தலைகள் சிதறி விழ; சிலை குனித்து - வில்லை வளைத்து; உதவுவான் - (முனிவர்க்கு) உதவி செய்தவனாவான்; திசை உளார் - இந்திரன் முதலிய திசை காப்பவர்களின்; பரம் உக - துன்பச் சுமை குறையுமாறு; பகை துமித்தருளுவான்- (அறத்திற்குப்) பகையாய் உள்ளவர்களை அழித்து
அருளுவான்; பரமர் ஆம் - மேம்பட்டவர்களாகிய; அரன் முதல் தலைவருக்கு- சிவபிரான் முதலான தேவர்களுக்கும்; அதிசயத் திறலினான்- வியக்கத்தக்க வலிமையுடையவனுமாவான்.

காவலா - அரசே; காயமான் ஆயினான்- மானிட உடம்பில் தோன்றும் இந்த இராமன்; ஆயமால் நாகர் தாழ் - கூட்டமாகவுள்ள பெருமை பொருந்திய தேவர்கள் வணங்குகின்ற; ஆழியானே அலால் - திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் திருமாலே அல்லாது; யாவனே- வேறு யாரவன்? நீ அம்மான் நேர்தி- நீ அப்பெருமைக்குரியவனுடன்நட்புக் கொள்வாயாக; நேர்இல் - நிகரில்லாத வலிமையுடைய; மாரீசன் ஆம்- மாரீசன் என்கின்ற; மாயமான் ஆயினான் - மாயமானாய் வந்தஅரக்கனுக்கு; மா யமான் ஆயினான் - (இந்த இராமன்) பெரிய யமனாகநின்று அழித்தவனாவான்.

திக்கு அவம் தர - எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்களெல்லாம் அழிவு அடையும்படி; நெடும் திரள் கரம் - நீண்ட திரண்ட கைகளையும்; சினவு தோள் - சினந்து பாய்கின்ற தோள்களையும் உடைய; அக்கவந்தனும் - அந்தக் 'கவந்தன்' என்னும் அரக்கனும்; உக்க அந்தமும் - (இவர்கள் கையால்) இறந்துபட்ட முடிவும்; உடல்பொறை துறந்து - (பின்னர்) நிலத்திற்குச் சுமையான தன் உடலை விட்டு; சவரி போல் - சபரி என்பவளைப் போல; நினைந்து அமரர் தாழ் - தேவர்களெல்லாம் மதித்து வணங்குகிற; உயர்பதம் புக்க அந்தமும் - உயர்ந்த பரமபதத்தை அடைந்த அழகும்; நமக்கு - எம் போல்வாருக்கு; உரை செயும் புரையவோ - சொல்லத்தகும் தன்மையை உடையனவோ?

இரவிதன் சிறுவனே - சூரியனின் மைந்தனே!முனிவரும் பிறரும் - முனிவர்களும் மற்றவர்களும்; மேல் முடிவு அரும் பகல் எலாம் - முற்காலம் தொடங்கி எல்லையில்லாத பல நாட்களாக; இனையர் வந்து உறுவர் என்று - இராமலக்குவராகிய இவர்கள் இவ்வனத்திற்கு வருவர் என்பதை உணர்ந்து; இயல் தவம் புரிகுவார் - தத்தமக்கு இயன்ற வண்ணம் தவங்களைச்
செய்பவர்களாய்; வினை எனும் சிறை துறந்து - (தவத்தின் பயனாய் இவர்களைக் காணப்பெற்று)இருவினை என்கின்ற கட்டினின்று நீங்கி; உயர்பதம் விரவினார் - உயர்ந்த வீடுபேற்றை அடைந்தார்கள்; எனையர் என்று - (அதனால்) இராமலக்குவரை எத்தன்மையர் என்று; உரை செய்கேன் - நான் சொல்ல வல்லேன்? (சொல்ல இயலாது)

ஐயா - தலைவனே! மதி இலா நிருதர் கோன் - அறிவில்லாத அரக்கர் தலைவனாகிய இராவணன்; மனைவியை - இந்த இராமனுடைய தேவியை; மாயையால் - வஞ்சனையால்; தீய கான் நெறியின் - கொடிய காட்டின் வழியிலே; உய்த்தனன் - கவர்ந்து சென்றான்;

அவள் தேடுவார் - அவளைத் தேடுபவர்களாய் வந்த இராமலக்குவர்; நீ - நீ; தவம் இழைத்து உடைமையால் - முன் தவம் செய்திருத்தலாலும்; நெடுமனம் தூயையா உடையையால் - சிறந்த மனத்தில் தூய்மை உடையனாய் இருத்தலாலும்; உறவினை - உன்னொடு நட்புக் கொள்ள; துணிகுவார் - துணிவாராயினர்.

புந்தியின் பெருமையாய் - அறிவில் மேம்பட்டவனே! அருள் தந் திருந்தனர் - (இராமலக்குவர்) நம்மாட்டுக் கருணை வைத்துள்ளனர்; தகை நெடும் பகைஞன் ஆம் - (அதனால்) வலிமை மிக்க பகைவனா கிய; இந்திரன் சிறுவனுக்கு - இந்திரன் மகன் வாலிக்கு; இறுதி- அழிவு; இன்று இசைதரும்- இப்பொழுது நேரிடும்; போதரு - (அதனால் அவர்களோடு நட்புக் கொள்ளப்) புறப்பட்டு வருவாயாக; என்று - என்று; மந்திரம் கெழுமுநூல் மரபு- மன்னர்க்குரிய நீதி நூல்களின் மரபினை; உணர்ந்து உதவுவான்- உணர்ந்து சுக்கிரீவனுக்கு ஆலோசனை சொல்பவனாகிய அனுமன்; உரைசெய்தான் - சொன்னான்.

அன்ன ஆம் உரை எலாம் - (அனுமான் கூறிய) அத்தன்மையன வாகிய சொற்களை எல்லாம்; அறிவினால் உணர்குவான் - தன் அறிவால் அறிந்துணர்ந்த சுக்கிரீவன்; பொன்னையே பொருவுவாய் - (அனுமனை நோக்கி) 'பொன் போன்றவனே'; உன்னையே உடைய எற்கு - அறிவில்
சிறந்த உன்னையே துணையாக உடைய எனக்கு; அரியது எப்பொருள் - எந்தச் செயல்தான் அரியது?போது - வருவாயாக; எனப் போதுவான் - என்று புறப்பட்டவனாய்; தன்னையே அனையவன் - (தனக்கு வேறு எவரும் ஒப்பில்லாமையால்) தன்னையே ஒப்பவனாகிய இராமனுடைய; சரணம் வந்து அணுகினான் - திருவடிகளை வந்தடைந்தான்.

கதிரவன் சிறுவன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; காமர் குண்டலம் துறந்த - அழகிய குண்டலங்களை நீக்கிய; கோல வதனமும் - அழகிய முகமும்; குளிர்க்கும் கண்ணும் - (கருணையால்) குளிர்ந்து நோக்கும் கண்ணும்; புண்டரிகங்கள் பூத்து - தாமரை மலர்கள் மலரப் பெற்று; புயல் தழீஇ - கருமேகம் தழுவப்பெற்று; பொலிந்த திங்கள் மண்டலம் - விளங்குகின்ற சந்திர மண்டலம்; உதயம் செய்த - உதிக்கப் பெற்ற; மரகதக் கிளி அனானை - மரகத மலையை ஒத்தவனான இராமனைக்; கண்டனன் - கண்டான்.

நோக்கினான் - (அவ்வாறு சுக்கிரீவன் இராமலக்குவரை) நோக்கி; நெடிது நின்றான் - (அவர்கள் அழகில் ஈடுபட்டு) நீண்ட நேரம் நின்றவனாய்; நொடிவு அரும் - அழிவு இல்லாத; கமலத்து அண்ணல் - தாமரையில் தோன்றிய நான்முகன்; ஆக்கிய உலகம் எல்லாம் - படைத்த உலகில்
உள்ள உயிர்கள் எல்லாம்; அன்று தொட்டு - படைப்புக் காலந் தொட்டு; இன்று காறும் - இன்று வரையிலும்; புரிந்த பாக்கியம் எல்லாம் - செய்த நல்வினைகள் எல்லாம்; குவிந்து - திரண்டு; இருபடிவம் ஆகி - இரண்டு திருவுருவமாய்; மேக்கு உயர் - மேலே உயர்ந்த; தடந்தோள் பெற்று- பெரிய தோள்களைப் பெற்று; வீரர் ஆய் விளைந்த - இவ்வீரர்களாய்த் தோன்றின; என்பான் - என்று எண்ணுபவன் ஆவான்.

அமரர்க்கு எல்லாம் - தேவர்களுக்கு எல்லாம்; தேவர் ஆம் தேவர்- கடவுளாகிய முதற்கடவுளே (திருமாலே); மாறி- தம் உருவம் மாறி; இப்பிறப்பில் - இந்தப் பிறவியை எடுத்து; மானிடர் ஆகி வந்தார் - மானிடராக வந்துள்ளார்; ஆறுகொள் சடிலத்தானும் - (அதனால்) கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும்; அயனும் - நான்முகனும்; என்று இவர்கள் ஆதி - என்று இவர்கள் முதலாக; வேறு உள குழுவை எல்லாம்- வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம்; மானுடம்
வென்றது -
மனித குலம் வென்றுவிட்டது; அன்றே - அல்லவா? தேறினன்- என்று தெளிந்தான்.

என இனைய நினைந்து - (சுக்கிரீவன்) என்று இத்தன்மையானவற்றை ஆலோசித்து; எண்ணி - -; இவர்கின்ற- மேன்மேலும் பெருகுகின்ற; காதல்- அன்பாகிய; ஓதக்கனை கடல் நின்று - வெள்ளத்தை உடைய ஒலிக்கின்ற கடலினின்றும்; கரை ஏறா - கரை ஏறாமல்; கண் இணை - கண்கள் இரண்டும்; களிப்ப நோக்கி- பெரு மகிழ்ச்சி அடையுமாறு பார்த்து; அனகனை - குற்றமற்றவனான இராமனை; குறுகினான் - அணுகினான்; அவ் அண்ணலும் - அந்தப் பெருமை பொருந்திய இராமனும்; அருத்தி கூர - அன்பு மிக; புனை மலர்த் தடக்கை நீட்டி- அழகிய தாமரை மலர் போன்ற பெரிய கைகளை நீட்டி; போந்து - 'இங்குவந்து; இனிது இருத்தி - இனிதாக இருப்பாய்'; என்றான் - என்று உபசரித்தான்.

அவாமுதல் அறுத்த- ஆசையை வேரோடு களைந்த; சிந்தை அனகனும் - மனத்தையுடைய குற்றமற்றவனாகிய இராமனும்; அரியின் வேந்தும் - குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனும் (ஒன்று கூடியவராய்); தவா வலி அரக்கர் என்னும் - அழியாத வலிமையை உடைய அரக்கர் என்கின்ற; தகா இருள் பகையை - தகுதியில்லாத இருளாகிய பகைவர்களை; தள்ளி - ஒழித்து; குவால் அறம் நிறுத்தற்கு - பலவகைப்பட்ட அறங்களை நிலைபெறச் செய்வதற்கு; ஏற்ற காலத்தின் - தக்காய் வந்த காலத்தின்; கூட்டம் ஒத்தார் - சேர்க்கையை ஒத்திருந்தார்கள்; உவா உற - (மேலும் அவர்கள்) அமாவாசை நேர; வந்து கூடும் - ஒன்றாக வந்து சேர்கின்ற; உடுபதி இரவி - சந்திரனையும் சூரியனையும்; ஒத்தார் - ஒத்து விளங்கினர்.

கூட்டம் உற்ற இருந்த வீரர் - நட்பாய் ஒன்றிக் கூடியிருந்த இராம சுக்கிரீவர்; குறித்தது ஓர் பொருட்கு - குறிப்பிட்டு நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு; முன்நாள் ஈட்டிய தவமும்- முற் பிறப்பில் செய்து தேடிக் கொண்ட தவமும்; பின்னர் முயற்சியும்- பின்பு (இப்பிறப்பில் தவப்பயனை
அடைய) எடுத்துக் கொள்ளும் முயற்சியும்; இயைந்தது ஒத்தார் - ஒன்று சேர்ந்ததை ஒப்பவர் ஆனார்; மீட்டும் - மேலும்; வாள் அரக்கர் என்னும் தீவினை - கொடிய அரக்கர்கள் என்னும் தீவினையை; வேரின் வாங்க - வேரோடு அழிக்க; கேட்டு உணர் கல்வியோடு - ஆசிரியர்பால் கேட்டு அறிந்த கல்வியோடு; ஞானமும்- தத்துவ ஞானமும்; கிடைத்தது ஒத்தார் - வந்து கூடியதை ஒத்தவரானார்.

ஆயது ஓர் அவதியின்கண் - அவ்வாறு ஒருங்கு கூடியிருந்த சமயத்தில்; அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; அரசை நோக்கி - இராானைப் பார்த்து; செல்வ - ''எல்லாச் செல்வமும்
உடையவனே! உலகுக்கு எல்லாம் - உலகம் அனைத்திற்கும்; நாயகம்என்னல் ஆம் - தலைமையான பொருள் என்று சொல்லுதற்கு ஏற்ற; நலம் மிக்கோயை - நல்ல குணங்களை உடையவனான; நின்னை - உன்னை; மேயினென் - யான் வந்து சேர்ந்தேன்; தீவினை தீய நோற்றார்- (எனவே) தீவினை ஒழியுமாறு தவம் செய்தவர்கள்; என்னின் யார்? - என்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்); விதியே நல்கின் - ஊழ்வினையே இவ்வாறு கூட்டி அருளுமாயின்; மேவல் ஆகாது என் - அடைய முடியாதது யாதுளது? (ஒன்றுமில்லை).

ஐய - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) ஐயனே! மை அறு தவத் தின்வந்த - குற்றமற்ற தவமுடையவளாய் வந்த; சவரி - சவரியானவள்; இம்மலையில் நீ வந்து- இந்த ருசியமுக மலையில் நீ வந்து; எய்தினை இருந்த தன்மை- பொருந்தி இருந்த நிலையை; இயம்பினள் - சொன்னாள்; யாங்கள் உற்ற - நாங்கள் அடைந்துள்ள; கையறு துயரம் - செயலற்று வருந்தும் பெருந்துன்பத்தை; நின்னால் கடப்பது கருதி - உன்னால் நீக்குவதுகருதி; வந்தேம் - இங்கு வந்தோம்; நின் தீரும் - அத்துன்பம் உன்னாலேயேதீர்வதாகும்'; என்ன - என்று கூற (அதைக்கேட்ட);
அரிக்குலத்து அரசன் - குரங்கினத்திற்கு அரசனாகிய சுக்கிரீவன்; சொல்வான் - சொல்லத்தொடங்கினான்.

முன்னவன்- எனக்கு அண்ணனாகிய வாலி; பின் வந்தேனை- பின் பிறந்த தம்பியாகிய என்னை (அடிக்க); முரண் உடை - வலிமையுள்ள; தடக்கை ஓச்சி - பெரிய கையை ஓங்கிக் கொண்டு; இருள் நிலை புறத்தின் காறும் - இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும்;
உலகு எங்கும் தொடர -
எல்லா உலகங்களிலும் பின்தொடர்ந்து துரத்த; இக்குன்று அரண் உடைத்துஆகி - இம்மலையையேபாதுகாவலாகக்கொண்டு; உய்ந்தேன் - உயிர் பிழைத்தேன்; ஆர் உயிர்துறக்கலாற்றேன் - அரிய உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்; சரண் உனைப் புகுந்தேன் - உன்னை அடைக்கலமாக அடைந்தேன்; என்னைத் தாங்குதல் - என்னைக் காப்பாற்றுதல்; தருமம் என்றான்-நினக்குரிய தருமமாகும் என்றான்.


புதன், 6 ஜூலை, 2011

மணிமேகலை ஆராய்ச்சி முன்னுரை

ஆராய்ச்சி முன்னுரை
மணிமேகலை என்னும் இவ் அணிகெழுநூல், ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இது சொன்னயமும் பொருள்நயமும் மிக்க விழுமிய நூலாகும்.

இந்நூலின் சிறப்பை "ஞகாரை முதலா" என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவில் 'இயைபு' என்னும் செய்யுள் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக அதன் உரையாசிரியர் பேராசிரியரால், "சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன" என்று பாராட்டிக் கூறுதலானும், பிற்காலச் செஞ்சொற்புலவராக மிளிர்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளால் "கொந்தார் குழல்மணிமேகலை நூல்நுட்பம் கொள்வதெங்ஙன்" என்று சிறப்புக்காட்டிச் சொல்வதானும், அம்பிகாபதி என்னும் ஆசிரியரால் "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று நயம் பெறக் கூறப்பெறுதலானும் இந்நூலின் அரும்பெருஞ் சிறப்புப் புலனாகும்.

இத்தகைச் சிறப்புவாய்ந்த இந்நூல் நல்லிசைப்புலமை வல்லுநரான கூலவாணிகன் சாத்தனாரால் அருளிச்செய்யப்பெற்றுச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளால் கேட்கப்பெற்ற பெருமையுடையது. இதனை "மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகார முற்றும்" என ஆசிரியர் இளங்கோவடிகளார், சிலப்பதிகார நூற் கட்டுரைக்கண் உரைத்தலானும், "இளங்கோவேந்தன் அருளிக்கேட்ப, வளங்கெழு கூலவாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு" என்று இந்நூற் பதிகத்தின்கண் கூறப்பெறுதலானும் அறியலாம் இவ்வாறுபாராட்டப்பெறும் இந்நூல், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த ஏசாச்சிறப்பின் இசைவிளக்கு பெருங்குடி மாசாத்துவான் மகனான கோவலற்கு ஆடல் பாடல் அழகு என்றிம் மூவகைப் பண்பு முற்றும் நிறைந்த நாடகக்கணிகை மாதவிபால் தோன்றிய 'மணிமேகலை' என்னும் பெண்ணினல்லாளின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெற்றியுடையது.

இதன்கண் 'விழாவறை காதை' முதலாக 'பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை' இறுதியாக முப்பது காதைகளால் மணிமேகலையாரின் வரலாற்றை எடுத்துச் செவ்வியமுறையில் விளக்கப்பெற்றுள்ளது.

இந்நூலாசிரியர் நாவீறுபெற்ற நல்லிசைப் புலவராகலான், ஆங்காங்கே கற்பனைத்திறங்களும் சொன்னலம் பொருணலம் யாவும் ஒருங்கே கெழுமுமாறு புனையப்பெற்றுக் கற்றாரைத் தம்வழி ஈர்த்து இன்பத்தை ஈத்து அன்பும் அருளும் பிறக்க நல்லொழுக்கப் பண்பை நயக்கும் பண்பு மிக்கது; இடையிடையே கிளைக்கதைகளும், அறமுறைகளும், அறிவுரைகளும் பொதிந்து கிடப்பதால் கற்றார் நெஞ்சைக்கரைக்கும் பெற்றிமைமிக்கதாய்த் திகழுவ திந் நூலென்றால் மிகையாகாது.

இனி, இந்நூலின் கதைச்சுருக்கமும், நூலின் நயமும் ஆய்ந்து காண்போம்

மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் தன் இல்லக்கிழத்தி கண்ணகியாரோடு சிலம்புவிற்று வாணிகஞ்செய்வதற்கு மதுரைக்குச் சென்றான். கள்வனென்று ஓர் பொற்கொல்லனால் குற்றஞ்சாற்றப்பெற்றுப் பாண்டி வேந்தனால் ஆங்கே கொலையுண்டு இறந்துபடுகின்றான்.

இச்செய்தியை மாதவி அறிகின்றாள்; உடனே தன் பொருள்களையெல்லாம் போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்து துறவுக் கோலங்கொள்கின்றாள்; அறவண வடிகள்பால் அறவுரைகேட்டுப் புத்த தருமத்தை மேற்கொண்டு ஒழுகிவருவாளாயினாள்.

பின்னர் மணிமேகலைக்கும் அச்செய்தி எட்டுகின்றது. அப்போது அங்கே இந்திரவிழா நடைபெறுகின்றது. அதுகாலை மணிகேலை பூமாலை தொடுத்துக்கொண்டிருக்கின்றாள். தந்தை இறந்த செய்தியறிந்ததும் கண்ணீர் கலங்கத் துன்புறுகின்றாள். கண்ணினீர் பூவின் மேல் விழுந்தது; அதனால் அதன் தூய்மை கெட்டுவிடுகின்றது. அப்பால் மலர்கொய்வதற்கு மலர்வனஞ் செல்கின்றாள். மணிமேகலையின் பால் காதல் கொண்டுள்ள அவ்வூர் வேந்தன் மகன் உதயகுமரன் என்பவன், இவளைத் தொடர்கின்றான். மணிமேகலையோடு உடன் சென்றிருந்த சுதமதி என்னும் அவள் தோழி அவளை அவன் வரக்கண்டதும் ஆங்குள்ள பளிக்கறையொன்றில் அடைத்துத் தாழிட்டுவிடுகின்றாள். அப்பால் உதயகுமரன் அவளைப் பெற விழைந்து அப்பளிக்கறைக்குச் செல்ல வழிகாணாது தியங்கி நின்று 'பின்னால் சித்திராபதியால் அவளை அடையக்கூடு'மென எண்ணிச் சென்றுவிடுகின்றான். அப்போது இந்திரவிழாவைக் காண்பதற்கு வந்த மணிமேகலாதெய்வம் அவர்கட்கு அறிமுகமான ஓர் மங்கை வேடம்பூண்டு அப் பொழிலையெய்திப் பளிக்கறையிலுள்ள புத்ததேவனின் பாதபீடிகையைப் பலவாறு வாழ்த்தியது. அதுகாலைப் பகற்பொழுது கழிகின்றது ; அந்திமாலை வந்துறுகின்றது.

உடனே வானத்தின்கண் திங்கண்மண்டிலந்தோன்றி வெள்ளி வெண்குடத்திலிருந்து பால்சொரிவதுபோலத் தன் தண்ணிலவைச் சொரிகின்றது. அப்போது மணிமேகலாதெய்வம் மீட்டும் புத்ததேவனது பாதபீடிகையை வணங்கிநின்றது. அப்போது சுதமதியைப் பார்த்து' 'நீ யார், இங்கே நிற்பதற்குக் காரணம் என்ன? உங்கட்குற்ற துன்பம் யாது?' என்று கேட்டது. அவள் உதயகுமரன் வந்துகூறிச் சென்ற வரலாற்றைக் கூறினாள். அதுகேட்ட மணிமேகலாதெய்வம் "உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள விருப்பம் சிறிதும் தணிந்திலது. இஃது அறவோர் வனமென்று கருதிவிட்டு நீங்கினானாயினும், இதனைக் கடந்து நீயிர் சென்றால், புறத்துள்ள தெருவின்கண் வந்து உட்படுத்துவான். ஆகவே இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேல்திசை இடத்ததாகிய சிறிய வாயில்வழியாகச் சென்று மாதவர் உறையும் சக்கர வாளக்கோட்டத்தை எய்தின் யாதொரு துன்பமும் அணுகாது; அங்கே செல்லுமின்," என்று கூறியது. அப்போது சுதமதி அதற்குச் சக்கர வாளக்கோட்டம் என்னும் பெயர் கூறுதற்குக் காரணங்கேட்ப, மணி மேகலாதெய்வம் அதன் வரலாற்றைக் கூறச் சுதமதி தூங்குதலுற்றாள். அதுகாலை மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவியெடுத்து, வான்வழியே முப்பதுயோசனை தொலைவு தெற்கே சென்று கடல் சூழ்ந்த மணிபல்லவம் என்னும்தீவில் அவளைவைத்துவிட்டுச்சென்றது.

'கங்குல் கழியில் என் கையகத்தா,' ளென ஏங்கித் துயிலாமல் இருந்த உதயகுமரன் கனவில் மணிமேகலாதெய்வம் தோன்றி, 'மன்னவன் மகனே! நீ தவத்திறம் பூண்டாள்தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக,' என அறிவுரை கூறிவிட்டு உவவனஞ்சென்று ஆங்கே தூங்குகின்ற சுதமதியைத் துயில்நீக்கி 'யான் மணிமேகலாதெய்வம்; இங்கே இந்திரவிழாக் காண்டற்குப் போந்தேன்; நீ அஞ்சாதே; மணிமேகலைக்குப்

புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.

பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.

அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.

புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.

அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்


புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.

பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.

அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.

புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.

அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்

புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.

பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.

அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.

புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.

அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்

அடிகளை வணங்கி அமுது செய்க,' என்று வேண்டி அமுது கொணர்ந்து உண்பித்தாய். அவன் உண்டருளிய அறம், நின் பிறப்பை ஒழிக்கும். அவ் இராகுலனே உதயகுமரன்; அதனால்தான் அவன் உன்னை விரும்பினான் ; உன் மனமும் அவனை மிக விரும்பியது ; அப் பற்றினை மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து உன்னை இத் தீவிற்குக் கொணர்ந்து வைத்து இப் புத்தபீடிகையைக் காட்டினேன்; முற்பிறப்பில் உனக்குத் தவ்வையராக இருந்த தாரை, வீரை யென்னும் இருவரும் மாதவியும் சுதமதியுமாகப் பிறந்து நின்னுடன் ஒன்றுபட்டனர். நீ பழம் பிறப்பும், அறத்தின் இயல்பும் அறிந்து கொண்டனை. பிற சமயக் கணக்கர்களின் கொள்கைகளையும் இனிமேற் கேட்பாய்; கேட்குங்கால் நீ இளம் பெண் என்று கருதி அவர் தத்தம் சமயக் கொள்கைகளைக் கூறார்; ஆதலான், நீ அதுகாலை வேற்றுருக் கொள்ளுதல் வேண்டும்," என்று கூறி வேற்றுரு வெய்தும் மந்திரமொழியும் வானிற்செல்வதற்கு ஆக்கும் மந்திர மொழியும் அவளுக்கு உரைத்தது.

அப்பால், "நீ புத்தர் அருளிய அறநெறியை அடைதல் உறுதி ; பீடிகையை வணங்கி நின் நகர்க்கண் செல்லுக," என்று எழுந்து நின்று, மீட்டும் கீழிறங்கி வந்து, "மக்கள் யாக்கை உணவின் பிண்டம், இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்," என்று அதனை அவட்கு அருளிச் செய்து, வானில் எழுந்து சென்றது.

மணிமேகலா தெய்வம் சென்றபின், மணிமேகலை ஆங்குள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வந்தாள். அப்போது தீவதிலகை யென்பாள் தோன்றினாள் அவள் மணிமேகலையைப் பார்த்து 'இங்கே தனியே வந்த நீ யார்?' என்றாள். அதற்கு மணிமேகலை, தான் வந்த வரலாற்றைக் கூறிவிட்டு 'நீ யார்?' என்று தீவதிலகையை வினாவினாள்.

அவள் "இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்தில் உயர்ந்து விளங்குகின்ற சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவன் திருவடிப் படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்கு வந்தேன் ; வந்தது முதல், இந்திரன் ஏவலால், இப் பீடிகையைக் காத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயர் தீவதிலகை." என்று கூறி, புத்த தேவர் அருள்நெறியில் நடப்போரே இதனைக் காண்டற்கு உரியர். கண்டவர் தம் பழம் பிறப்பை உணர்வார்; நீ அவ்வாறானால், மிகப் பெரியை; இப் பீடிகைக்குமுன் 'கோமுகி' என்னும் பொய்கை யொன்று உளது. அதனுள்ளிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; இன்று அந்நாளே ; தோன்றும் காலமும் இதுவே ; இப்போழுது அது நின்கையில் வரும் போலும். அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் அதன் வரலாற்றை அறவண அடிகள்பால் நின்னூரிற் கேட்பாய்," என்று கூறினாள்.

மணிமேகலை அதை விரும்பி., பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையினுள்ளிருந்து, மணிமேகலையின் கையில் வந்தடைந்தது. உடனே அவள் மகிழ்ந்து, புத்ததேவரைப் பலவாறு வாழ்த்தித்தொழுதாள். அப்போது தீவதிலகை மணிமேகலைக்கு உயிர்களுக்கு உண்டாகும் பசிப் பிணியின் கொடுமையையும் அதை நீக்குவோர்க்கு உண்டாம் பெருமையையும் கூறி; 'இனி நீ உணவளித்து உயிர்களைப் பாதுகாக்கும்

அறத்தைச் செய்வாய்' என்றாள். உடனே மணிமேகலை 'அவ்வாறே செய்வே,'னென்று கூறித் தீவதிலகையை வணங்கிப் புத்த பீடிகையைத் தொழுது வலங்கொண்டு பாத்திரத்தைக் கையிலேந்தி வானிலே எழுந்து சென்று, புகாரில் தன்னைக் காணாமல் வருந்திநிற்கும் சுதமதியையும், மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையுமாறு அவர்களின் முற்பிறப்பை அறிவித்து, "மக்கள் யாக்கையிற் பெறுதற்குரிய தவ வழியை இனி அறவண அடிகள்பாற் பெறக்கடவீர்; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் ஆகும்; இதனைத் தொழுமின்," என்று சொல்லி அதனை அன்புடன் தொழுத அவர்களோடு, அறவணவடிகளைக் காண்டற்குச் சென்றனள்.

சென்ற மணிமேகலை அறவணவடிகள் இருக்குமிடத்தை யடைந்தாள் ; அவர் திருவடியை மும்முறை வணங்கினாள் ; தான் உவவனஞ் சென்றது முதல் அட்சயபாத்திரம் பெற்றதுவரை யாவற்றையும் தெரிவித்தாள். அவர் கேட்டு மகிழ்ந்தனர் ; பின், முற்பிறப்பிலே துச்சயராசன் மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும், சுதமதியுமான வரலாற்றை அவர்கட்கு உரைத்துப் பின்னும் மணிமேகலையைப் பார்த்து, 'இவ்வுலகில் புத்ததேவன் அருளிய அறங்கள் குறைந்தன; மறங்கள் மிகுந்தன; சக்கரவாளத்திலுள்ள தேவர்களின் வேண்டுகோளினால், ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் துடித லோகத்திலுள்ள தேவன், இவ் வுலகிலே தோற்றஞ்செய்வான்; பின்பு யாவர்க்கும் அருளறத்தில் மனஞ்செல்லும்; புத்தர் தோன்றுங் காலத்தில், ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியனவும், உயிர்களும் இன்னின்னவாறு நலத்துடன் விளங்கும்,' என்று கூறிப் பின்னரும் 'இந் நகரில் உன்னால் சில நலங்கள் நிகழ்வனவாம், அவை நிகழ்ந்த பின்பல்லாமல், யான் கூறும் அறவுரை, நின் மனத்திற் பொருந்தாது. இவ் விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வணங்கினராதலின், பின்னர் உன்னோடு கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினின்றும் விடுபட்டு வீட்டுநெறிச்செல்வர். ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபியை நீபெற்றனை; மக்கள், தேவர் என்பார்க்கு ஏற்ற தன்மையில் செய்யும் அறம், உயிர்களின் பசிப்பிணி தீர்த்தலொன்றே,' என்ற நல்ல அறவுரை கூறினார். மணிமேகலையும் உயிர்களின் பசித்துன்பம் நீங்கப் பாத்திரத்தை எடுத்தாள்.

அப்போது அறவண அடிகள், 'அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கேட்பாயாக,' வென்று கூறி அவன் வரலாற்றை விரித்துரைத்தார். பின்பு, 'காவிரியாறானது மாறாமல் நீர் பெருகி நாட்டை வளம்பெறச்செய்தாலும்உயிர்கள் எக்காரணத்தாலோ வருந்துகின்றன. ஆதலால், பாற்கடல் தந்த அமிழ்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதுபோல், மிகப் பயன்படுவதான இவ்வமுதசுரபியைச் சும்மா வைத்திருத்தல் தகுதியன்று,' என்று கூறினர்.

அதுகேட்ட மணிமேகலை அவரை வணங்கித் தொழுது அப்போதே பிக்குணிக் கோலம்பூண்டு அப் பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந் தெருவிற் போய்ச் சேர்ந்தாள்; மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்தனர். அப்பொழுது மணிமேகலை, "கற்புடைய மாதர் இடும் ஐயத்தையே முதலில் ஏற்பது தகுதி," என்று சொல்ல, காயசண்டிகை, "கற்புடைய மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்," என்று அவட்குக் கூறினாள்.

அவ்வாறு கூறி, காயசண்டிகை, ஆதிரையின் வரலாற்றை விரித்துரைத்து, 'அவன் கற்புமிக்கவளாதலால், அவள் கையில் முதலில்

ஐயம் கொள்க,' என்று சொன்னாள்; மணிமேகலை, ஆதிரைமனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப் பாவைபோல் நின்றாள். நின்றவுடன், ஆதிரை தொழுது வலங்கொண்டு அமுதசுரபியின் உள்ளிடம் நிறைய, 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக.' எனக் கூறி, ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை அள்ளியிட்டாள்.

ஆதிரையளித்த பிச்சையை முதலில் ஏற்று அமுதசுரபியிலுள்ள சோற்றுத்திரளையைப் பசியால் வாடிய பலர்க்கும் வழங்கினாள்; அது வழங்குந்தோறும் குறையாமல் வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அதுகண்ட காயசண்டிகை, 'அன்னையே! என் தீராப் பசியையும் தீர்த்தருளுக,' என்று வேண்டி நின்றாள். உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒருபிடி அமுதை எடுத்து அவள் கையில் இட்டாள். அதனை உண்டு பசிதீர்ந்த காயசண்டிகை, தனக்குக் கொடு நோய் வந்த வரலாற்றைக் கூறித், தன் பசிதீர்த்தமைக்கு நன்றிபாராட்டி, 'நான் என் நாட்டிற்குச் செல்வேன்; நீ இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு; அதில் பலரும் வந்து புகுதற்காக எப்பொழுதும் வாயிற்கதவு திறந்துள்ள 'உலகவறவி' என்னும் அம்பலம் ஒன்றுளது. அதில் மிக்க பசியுற்றோர், பிணியுற்றோர் முதிலியோர், உணவிடுவோரை எதிர்பார்த்திருப்பார். ஆதலின், நீ ஆங்கே செல்க,' என்று கூறிவிட்டு அவள் தன் ஊர்க்குச் சென்றனள்.

பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச்சென்று உலகவறவியை அடைந்து அதனை மும்முறை வலம்வந்து பணிந்து அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி அமுதசுரபியுடன் தோன்றி, "இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும்; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும்வருக," என்று கூறப், பலரும்வந்து உண்பாராயினர். ஆதலின், அவ்வம்பலத்தில் உண்ணும் ஒலிமிகுந்தது.

மணிமேகலை பிக்குணிக்கோலத்துடன் ஐயக்கடிஞைகொண்டு ஐயமேற்று, உலகவறவியிற் சென்றாளென்பதைக் கேள்வியுற்ற சித்திராபதி மனங்கொதித்துப் பெருமூச்செறிந்து கலங்கி, "மணிமேகலையின் இச்செயலை ஒழிப்பேன்," என எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தையர் எல்லோரையும் பார்த்து, "கோவலன் இறந்ததுகேட்டு மாதவியானவள் முனிவர்கள் பள்ளியை அடைந்து தவக்கோலம் பூண்டிருத்தல் நகைக்கத்தக்கதே; நம் குலவொழுக்கத்துக்குத் தவக்கோலம் ஒவ்வாதது; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவளைப் பலநாட்களாக விரும்பியிருக்கும் உதயகுமரனால், அவனது தேரில் ஏற்றுவித்து வருவேன்; அவ்வாறு செய்யேனானால், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கல்லைத் தலைமேலேற்றிக்கொண்டு நாடகவரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடகமகளிர்போல, இனி நான், நாடகக் கணிகையர் மனையிடத்துச் செல்லேனாகுக," என்றுசூளுரைகூறி உதயகுமரன் இருப்பிடத்தை வந்து சேர்ந்து அவனை வாழ்த்தி வணங்கி, மணிமேகலை உலகவறவியை அடைந்த செய்தியைக் கூற, அவன் மணிமேகலயை உவவனத்திற் கண்டது முதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவளிடமுள்ள சிறப்புத்தன்மையைப் பாராட்டினான். சித்திராபதி அவன் உள்ளம் திரியமொழிகள் பலவற்றைக் கூறினாள் ; அவன் மனம் மாற்றமுற்றுத் தேரேறி உலகவறவியை அடைந்து பலர்க்கும் உண வளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற்சென்று, "நீ தவக்கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினவினான். மணிமேகலை, "பழம்பிறப்பில் கணவனாக இருந்த இவனை வணங்குதல் முறையாகும்," என்று எண்ணி வணங்கி,